செய்திகள் :

சஞ்சு சாம்சனுக்கு காயம்; மீண்டும் அணியில் இடம்பெறுவாரா?

post image

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் (பிப்ரவரி 2) நிறைவடைந்தது. நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இந்திய அணி, 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையும் படிக்க: டி20 போட்டிகளில் அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புகிறோம்: கௌதம் கம்பீர்

சஞ்சு சாம்சனுக்கு காயம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியின்போது, வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து சஞ்சு சாம்சனின் ஆள்காட்டி விரலில் பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அடுத்த ஒரு மாதத்துக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சஞ்சு சாம்சனுக்கு அவரது வலது கை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் வலைப்பயிற்சியை தொடங்குவதற்கு 5 அல்லது 6 வாரங்கள் ஆகலாம். அதனால், வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கவுள்ள ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டியில் கேரள அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அபிஷேக் சர்மாவுக்கு ஜோஸ் பட்லர் பாராட்டு!

கடந்த ஆண்டு வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் சஞ்சு சாம்சன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தார். அவர் 7 போட்டிகளில் 3 சதங்கள் விளாசினார்.

இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சஞ்சு சாம்சன் வெறும் 51 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த தொடரில் முதல் போட்டியில் அவர் எடுத்த 26 ரன்களே அவரது அதிகபட்சமாகும்.

இதையும் படிக்க: பிசிசிஐ விருதுகள்: யார் யாருக்கு என்னென்ன விருதுகள்? முழு விவரம்!

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு, இந்திய அணி வெள்ளைப் பந்து போட்டிகளில் அடுத்த சில மாதங்களுக்கு விளையாடப் போவதில்லை. வருகிற ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி இருதரப்பு தொடரில் விளையாடவுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சரியாக விளையாடாத நிலையில், வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் சம்சு சாம்சன் இடம்பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அபிஷேக் சர்மா இன்னும் அதிகமாக பந்துவீச வேண்டும்; முன்னாள் இந்திய வீரர் வலியுறுத்தல்!

அபிஷேக் சர்மா இன்னும் அதிகமான ஓவர்கள் பந்துவீச வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்ட... மேலும் பார்க்க

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 4 பேருக்கு இடம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது.19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. மலேசியாவில் நடைப... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கான போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை தொடக்கம்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. போட்டிகள் ... மேலும் பார்க்க

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் கிறிஸ் கெயில்!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் விளையாடவுள்ளார்.சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கி மார்ச் ... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புகிறோம்: கௌதம் கம்பீர்

டி20 போட்டிகளில் இந்திய அணி அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புவதாக தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் (பிப்ரவரி ... மேலும் பார்க்க

அபிஷேக் சர்மாவுக்கு ஜோஸ் பட்லர் பாராட்டு!

இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மாவை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பாராட்டியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத... மேலும் பார்க்க