செய்திகள் :

சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் சீனா! தைவான் கடும் கண்டனம்!

post image

தைவான் நாட்டு கடல் பகுதியில் சீனா சட்டவிரோதமாக மீன்பிடிப்பதற்கு அந்நாட்டின் கடலோரக் காவல் படை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தெற்கு சீனக் கடல் பகுதியிலுள்ள தைவான் நாட்டின் தோங்ஷா தீவுகளின் அருகில் கடந்த பிப்.15 அன்று சீனாவைச் சேர்ந்த 6 பெரிய கப்பல்களுடன் 29 மீன்பிடி படகுகள் சட்டவிரோதமாக மீன்பிடித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு சென்று தைவானின் கடலோரக் காவல் படையினர் அந்த படகுகளை அப்புறப்படுத்தியபோது சீன கடலோரக் காவல் படையின் கப்பல்கள் தைவானின் கடல் பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறப்படுகின்றது.

இதுகுறித்து தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில், பிப்.15 சம்பவத்தைத் தொடர்ந்து தைவான் கடல் பகுதியில் சீனப் படகுகள் நுழைவதைத் தடுக்க கடந்த பிப்.26 அன்று தோங்ஷா தீவுகளை சுற்றி ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஸ்லோவாக்கியாவில் வேகமாக பரவும் தொற்று! எல்லைக் கட்டுப்பாடு விதித்த செக் குடியரசு!

இந்த நடவடிக்கையின் போது, சீனாவைச் சேர்ந்த ’யூயிராயு 23588’ என்ற மீன்பிடி படகை பிடித்தாகவும் ஆனால், அப்போது சீனக் கடலோரக் காவல் படையினர் மீண்டும் தலையிட்டதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், சீனாவின் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மார்ச் 11,12 மற்றும் 18 ஆகிய நாள்களில் தொடர்ந்து நடைபெற்றதாகக் குறிபிடப்படும் நிலையில் இந்தத் தலையீடு தங்களது நாட்டின் இறையாண்மைக்கு ஒரு சவாலாகவுள்ளதாகக் கூறி தைவான் கடலோரக் காவல் படை கண்டித்துள்ளது.

முன்னதாக, தைவானின் தோங்ஷா தீவைச் சுற்றியுள்ள பகுதிகள் அந்நாட்டின் பாதுகாக்கப்பட்ட சரணாலயம் ஆகும் அப்பகுதியில் வர்த்தகம் மற்றும் தனிமனித ரீதியான மீன்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சீனாவின் கடல் வளம் தொடர்ச்சியான மீன்பிடிப்பினால் கடுமையாக பாதிப்படைந்துள்ளதினால் அந்நாட்டு மீனவர்கள் தைவான் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம்: விக்ரமராஜா

சேலம் : டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். சேலம் ... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி நாளை ஆலோசனை

சென்னை: தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா்.த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: விஜய்

சென்னை: பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம... மேலும் பார்க்க

ஏப். 6-ல் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதல்வா் திறந்து வைக்கிறாா்!

நீலகிரி: நாட்டிலேயே முதன் முறையாக பழங்குடியினா்களுக்கு என 50 படுக்கை வசதிகளுடன், மலை பிரதேசத்தில் அதிநவீன 700 படுக்கைகள் கொண்ட உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஏப்ரல் 6 ஆம் தேதி முதல்வர் மு.க.... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் போராட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் திமுக தோ்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈட... மேலும் பார்க்க

தமிழ்நாட்டையும், தமிழா்களையும் ஏளனம் செய்கிறாா் நிா்மலா சீதாராமன்: கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டையும், தமிழா்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏளனம் செய்வதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவா் கனிமொழி குற்றச்சாட்டியுள்ளாா்.இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்... மேலும் பார்க்க