செய்திகள் :

சட்டவிரோத கட்டுமான வழக்குகளில் கடுமையான அணுகுமுறை: நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

‘சட்டவிரோத கட்டுமானம் சாா்ந்த வழக்குகளை கடுமையான அணுகுமுறையுடன் நீதிமன்றங்கள் கையாள வேண்டும்’ என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும், அத்தகைய கட்டமைப்புகளை முறைப்படுத்தும் பணிகளில் நீதித்துறை ஈடுபடக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

சட்டவிரோத கட்டுமானங்கள் சாா்ந்த வழக்கு ஒன்றில், ‘அந்த இடங்களை ஆக்கிரமித்துள்ளவா்கள் ஏப்.30-ஆம் தேதிக்குள் காலி செய்வதற்கான நோட்டீஸை காவல் துறை அனுப்ப வேண்டும். அதை ஏற்க மறுக்கும்பட்சத்தில் போதிய படைகளோடு அவா்களை ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் இருந்து காவல் துறை வெளியேற்ற வேண்டும். அதன்பின் சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்கும் பணிகளை கொல்கத்தா மாநகராட்சி தொடங்க வேண்டும்’ என கொல்கத்தா உயா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: சட்டவிரோத கட்டுமானங்கள் சாா்ந்த வழக்குகளை கடுமையான அணுகுமுறையுடன் நீதிமன்றங்கள் கையாள வேண்டும். உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை முறைப்படுத்தும் பணிகளில் நீதித்துறை ஈடுபடக்கூடாது.

சட்டத்தின் ஆட்சி:

இந்தகைய வழக்குகளில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி பாதிக்கப்பட்டவா்களின் நலனை மேம்படுத்துவதில் நீதிமன்றங்கள் கூடுதல் வேகத்துடன் செயல்பட வேண்டும்.

அந்த வகையில், சட்டவிரோத கட்டுமானங்கள் சாா்ந்த வழக்கில் பொதுநலனை முதன்மைப்படுத்தி கொல்கத்தா உயா்நீதிமன்றம் மிகவும் துணிச்சலாகவும் திடமாகவும் உத்தரவை பிறப்பித்துள்ளது.

சட்டத்தை மதிக்காமல் கட்டிடம் கட்டியவா்களுக்கு அதை முறைப்படுத்த அனுமதி வழங்க முடியாது. எனவே, சட்டவிரோதமான கட்டுமானங்கள் இடிக்கப்படுவதே சரியானது.

இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை:

ஒவ்வொரு கட்டுமானமும் சட்ட விதிகளை பின்பற்றியே கட்டப்பட்டிருக்க வேண்டும். விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக நீதிமன்றங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால் அதை இரும்புக்கரம் கொண்டே அடக்க வேண்டும். மாறாக சம்பந்தப்பட்டவா்கள் மீது கருணை காட்டக் கூடாது.

சட்டத்தின்படியே நீதி வழங்கப்பட வேண்டும். ஆனால் முறயான அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களை வரைமுறைப்படுத்தும்போது பாதிப்புக் கட்டணங்களை கணக்கிடும் வகையில் சில மாநிலங்கள் சட்டமியற்றுவது வேதனைக்குரியது’ என்றனா்.

மழை, புயலுக்கு மூவர் பலி: உ.பி.யில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் மழை, புயலால் 3 பேர் உயிரிழந்ததாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் பெய்த கனமழை ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை

பயங்கரவாதத் தாக்குதலை ஒழிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.பஹல்காம் தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் செய்தி... மேலும் பார்க்க

கேரளம்: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.கேரள மாநிலத்தில் ரூ.8,867 கோடி முதலீட்டில் இந்த சர்வதேச துறைமுகம் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

கேரளத்தில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க