செய்திகள் :

சண்டையில்தான் தோற்றிருக்கிறோம், போரில் அல்ல: ஷ்ரேயாஸ் ஐயர்

post image

ஆர்சிபி உடனான குவாலிஃபயர் 1-இல் தோல்விக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சண்டையில்தான் தோற்றிருக்கிறோம் போரில் அல்ல என தன்னம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

முல்லான்பூரில் நேற்றிரவு நடைபெற்ற குவாலிஃபயர் 1-இல் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அடுத்து விளையாடிய ஆர்சிபி 10 ஓவர்களில் 106/2 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

தோல்விக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் பேசியதாவது:

பந்துவீச்சாளர்களைக் குறைகூற முடியாது

இந்தநாளை மறக்க முடியாது. ஆனால், மீண்டும் டிராயிங் போர்ட்டுக்கு சென்று என்னென்ன தவறுகள் செய்தோம் என்று கவனிக்க வேண்டும். தொடக்கத்தில் அதிகமான விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இந்தப் போட்டியில் கற்பதற்கு அதிகமாக இருக்கிறது.

உண்மையில், என்னுடைய முடிவுகளுக்காக நான் பெரிதாகக் கவலைப்படவில்லை. களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் திட்டமிட்டவை எல்லாமே சரியாக இருந்தது. அதைச் செயல்படுத்துவதில் தவறிவிட்டோம்.

இந்த மாதிரியான குறைவான இலக்கை கட்டுப்படுத்துவது கடினம். அதனால், பந்துவீச்சாளர்களைக் குறைகூற முடியாது.

சண்டையில்தான் தோற்றிருக்கிறோம், போரில் அல்ல!

குறிப்பாக இந்தமாதிரியான ஆடுகளத்தில் நாங்கள் பேட்டிங்கை முன்னேற்ற வேண்டும். நாங்கள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்த பிட்ச்சில் மாறுபட்ட பௌன்சர்கள் இருந்தன.

என்ன இருந்தாலும் தொழில்முறை வீரர்களாக நாங்கள் தோல்விக்கு இந்தமாதிரி காரணங்களைக் கூறக்கூடாது. சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடியிருக்க வேண்டும். சண்டையில்தான் தோற்றிருக்கிறோம், போரில் அல்ல எனக் கூறியுள்ளார்.

எலிமினேட்டரில் வெற்றிபெறும் அணியுடன் பஞ்சாப் அணி ஜூன் 1ஆம் தேதி மோதவிருக்கிறது.

பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி: இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது!

ஐபிஎல் 2025 தொடரின் இறுதி ஆட்டத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது.ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 1) அகமதாபாதில் நடைபெற்ற குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்த... மேலும் பார்க்க

மழையால் தாமதமாகும் குவாலிஃபையர் 2; மும்பை இந்தியன்ஸுக்கு ஆபத்தா?

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2 போட்டி மழையால் தாமதம் ஆகியுள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் இன்று (ஜூன் 1) நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ம... மேலும் பார்க்க

குவாலிஃபையர் 2: மும்பை பேட்டிங்; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் இன்று (ஜூன் 1) நடைபெறும் குவாலிஃபையர் 2 ... மேலும் பார்க்க

மும்பைக்கு எதிரான போட்டியில் சஹால் வருகை?

குவாலிஃபயர் 2 போட்டியில் பஞ்சாப் அணியில் சஹால் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் (219) எடுத்துள்ள யுஸ்வேந்திர சஹால் (34 வயது) பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார... மேலும் பார்க்க

கோப்பை கனவு: கால்பந்து உலகில் நடக்கும் அதிசயம் ஆர்சிபிக்கும் நடக்குமா?

கோப்பையே வெல்லாத கால்பந்து அணிகள் எல்லாம் இந்த சீசனில் வெல்லும்போது ஆர்சியாலும் வெல்ல முடியுமென அதன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சீசனில் கால்பந்து உலகில் பல அணிகள்... மேலும் பார்க்க

ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?

ஜஸ்பிரீத் பும்ராவின் சமீபத்திய பேட்டி விராட் கோலி ரசிகர்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தால் மகிழ்ச்சியில... மேலும் பார்க்க