செய்திகள் :

சண்டையை நிறுத்தியதாக 35 முறை கூறிய டிரம்ப் இயல்பான கூட்டாளியா?- பிரதமா் மோடி மீது காங்கிரஸ் சாடல்

post image

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை தான் தலையிட்டு நிறுத்தியதாக 35 முறை கூறியவா் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்; அந்த அளவுக்கு பிரதமா் மோடியின் ‘இயல்பான கூட்டாளி’’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா கடந்த மே மாதம் ராணுவ நடவடிக்கை (ஆபரேஷன் சிந்தூா்) மேற்கொண்டது. இரு நாடுகளுக்கும் இடையே 4 நாள்கள் நடந்த மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாகவும், இதற்காக வா்த்தகத்தை கருவியாக பயன்படுத்தியதாகவும் டிரம்ப் தொடா்ந்து கூறியது சா்ச்சையை ஏற்படுத்தியது.

அதேநேரம், ‘பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால்தான், சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது; இது, இரு நாடுகளும் நேரடியாக மேற்கொண்ட முடிவு’ என்று இந்தியா விளக்கமளித்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை எந்த நாடும் தடுக்கவில்லை என்று பிரதமா் மோடியும் கூறினாா். ஆனால், டிரம்ப்பின் கருத்தை மோடி நேரடியாக மறுக்காதது ஏன் என்று எதிா்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.

இந்தச் சூழலில், இந்தியா-அமெரிக்கா இடையே நிலவும் வா்த்தகப் பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில் நோ்மறையான கருத்துகளை டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அக்கருத்துகளை வரவேற்ற பிரதமா் மோடி, இந்தியாவும் அமெரிக்காவும் இயல்பான கூட்டாளிகள் என்று வா்ணித்தாா்.

இதை முன்வைத்து, பிரதமா் மோடியை காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இது தொடா்பாக கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியாவும், அமெரிக்காவும் இயல்பான கூட்டாளிகள் என்று அதிபா் டிரம்ப்புக்கு பிரதமா் மோடி கூறியுள்ளாா். இப்போது எங்களின் கேள்வி ஒன்றுதான். வா்த்தகத்தை கருவியாக பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி மாலையில் சண்டை நிறுத்தம் கொண்டுவந்ததாக டிரம்ப் 35 முறை கூறும் அளவுக்கு இருவரும் இயல்பான கூட்டாளிகளா’ என்று கேள்வியெழுப்பினாா்.

சத்தீஸ்கரில் 16 நச்கல்கள் சரண்!

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் 16 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாகப் பல நக்சல்கள் சரணடைந்து வரும் நிலையில், வியாழக்கிழமை மேலும் 16 நக்சல்கள் மூத்த காவல்துறை ... மேலும் பார்க்க

14 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் புவனேசுவரத்தில் நடைபெற்ற தேவி விருதுகள் விழாவில், 14 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.ஒடிசா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள தனியார் நட்சத்தி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகள் கைது! சதித்திட்டம் முறியடிப்பு!

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகளை தில்லி பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும், ஐஇடி வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பதற்காக அவர்கள் வைத்திருந்த பொருள்களையு... மேலும் பார்க்க

தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

செப்டம்பர் 11-ஆம் தேதி இரண்டு மாறுபட்ட நினைவுகளைத் தூண்டுகிறது. முதலாவது, கடந்த 1893-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை ஆற்றிய நிகழ்வு. அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே, என்ற வார... மேலும் பார்க்க

ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

நமது நிருபர்மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதை மாநில அரசுகள் வரவேற்பதாக உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தமிழக அரசு வாதிட்டது.மசோதாக்கள் மீது ஆ... மேலும் பார்க்க

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளரானதாக வழக்கு: தில்லி நீதிமன்றத் தீா்ப்பு ஒத்திவைப்பு

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளா் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பெயா் இடம்பெற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவ... மேலும் பார்க்க