செய்திகள் :

சதம் அடிப்பதில் உறுதியாக இருந்தேன்: ஹாரி ப்ரூக்

post image

சதம் அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியை ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி ப்ரூக் இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் 150 ரன்களைக் கடந்து அசத்தினர். ஹாரி ப்ரூக் 158 ரன்களும், ஜேமி ஸ்மித் 184* ரன்களும் எடுத்தனர். தற்போது, இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

சதம் அடிப்பதில் உறுதி

சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க உதவிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனேன். அப்போது, அடுத்த போட்டியில் கண்டிப்பாக சதம் விளாச வேண்டும் என நினைத்தேன். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நாங்கள் மீண்டும் ஆட்டத்துக்குள் வந்துள்ளதாக நினைக்கிறோம். என்னால், எவ்வளவு நேரம் பேட்டிங் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பேட்டிங் செய்ய வேண்டும் என நினைத்தேன்.

இந்திய அணி எங்களைக் காட்டிலும் முன்னிலையில் இருக்கிறார்கள். ஆனால், விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களுக்கு நாங்கள் அழுத்தத்தை ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசினார்கள் என்றார்.

முதல் டெஸ்ட் போட்டியில் ஹாரி ப்ரூக் முதல் இன்னிங்ஸில் 99 ரன்களிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

England batsman Harry Brook says he was determined to score a century.

இதையும் படிக்க: அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!

கேப்டன் ஷுப்மன் கில் அபாரம்; இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில்... மேலும் பார்க்க

ஷுப்மன் கில் சதம் விளாசல்; முன்னாள் இந்திய கேப்டனின் சாதனை முறியடிப்பு!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போ... மேலும் பார்க்க

அதிவேக சதம் விளாசி வைபவ் சூர்யவன்ஷி சாதனை: இங்கிலாந்துக்கு 364 ரன்கள் இலக்கு!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் விளாசி இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார்.19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளைய... மேலும் பார்க்க

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இலங்கைக்கு 249 ரன்கள் இலக்கு!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 5) கொழும்புவில் நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

யு-19 நான்காவது ஒருநாள்: சதம் விளாசி அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி!

இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான 4-வது ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக சதம் விளாசி அசத்தியுள்ளார்.19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ... மேலும் பார்க்க

உணவு இடைவேளை: 357 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 357 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில... மேலும் பார்க்க