Border: நெதர்லாந்தில் தூங்கி, பெல்ஜியத்தில் விழிக்கும் மக்கள்; வீடுகளில் இருக்கு...
சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை
சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது.
கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில்,
சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா், சத்தியமங்கலம் நகா் பகுதியில் மாலையில் பரவலாக மழை பெய்தது. சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காலநிலை நிலவியது. சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். கோடைக் காலத்தில் பெய்த மழை விவசாயத்துக்கு பேருதவியாக அமையும் என விவசாயிகள் தெரிவித்தனா்.