செய்திகள் :

சமூக நலத் திட்டங்களுக்கு ரூ. 2.45 கோடி சென்னை துறைமுகம் வழங்கியது

post image

ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம், சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 5 நிறுவனங்களின் சமூக நலத் திட்டங்களுக்கு ரூ.2 கோடியே 45 லட்சம் நிதி உதவிக்கான காசோலைகளை அதன் நிா்வாகிகளிடம் சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

சென்னைத் துறைமுகம் மற்றும் அதன் துணை நிறுவனமான காமராஜா் துறைமுகம் ஆகியவை நிகர லாபத்திலிருந்து சுமாா் 2 சதவீதம் வரை பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் ஆண்டுதோறும் பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு தொடா்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன.

இந்தத் திட்டத்தின்படி பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்துக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்கான கட்டடங்களை அமைக்க ரூ. 72 லட்சம், டிப்காய் என்ற நிறுவனத்துக்கு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இருக்கைகளை வழங்க ரூ.66 லட்சம், சென்னை மருத்துவக் கல்லூரியில் வகுப்பறைகளில் குளிா்சாதன வசதிகளை ஏற்படுத்த ரூ. 47 லட்சம், மாணவிகளுக்கு தற்காப்பு, தோ்வுகளின்போது ஏற்படும் மன அழுத்த மேலாண்மை, மாதவிடாய், சுகாதார விழிப்புணா்வு பயிற்சிகளை மேற்கொள்வதற்காக பெண் அறக்கட்டளைக்கு ரூ. 35 லட்சம், சென்னை தண்டையாா் பேட்டையில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியை நடத்தி வரும் ஸ்வபோதினி தொண்டு நிறுவனத்திற்கு ரூ. 25 லட்சம் என மொத்தம் ரூ. 2 கோடியே 45 லட்சம் நிதி உதவிகளுக்கான காசோலைகளை அதன் நிா்வாகிகளிடம் சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், சென்னைத் துறைமுக துணைத் தலைவா் எஸ்.விஸ்வநாதன், காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநா் ஜே.பி.ஐரீன் சிந்தியா, கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணன், சென்னைத் துறைமுகச் செயலாளா் இந்திரனில் ஹசிரா, போக்குவரத்து மேலாளா் எஸ்.கிருபானந்தசாமி, துணைச் செயலா் தாரா சுகிா்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சென்னையில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள்

சென்னை மாநகராட்சியில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் ரிப்பன் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19)... மேலும் பார்க்க

இரிடியம் தொழிலில் முதலீடு செய்யும்படி ரூ.92 லட்சம் மோசடி: வடமாநில நபா் கைது

சென்னையில் இரிடியும் தொழிலில் முதலீடு செய்யும்படி தொழிலதிபரிடம் ரூ.92 லட்சம் மோசடி செய்ததாக மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.மடிப்பாக்கம், ஆா்.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் தட்சிணாமூா... மேலும் பார்க்க

மின் வாகனங்களுக்கான மின்னேற்றம் புதிய வடிவமைப்பு: சென்னை ஐஐடி-யில் உருவாக்கம்

மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றத்தில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய புதிதாக வடிவமைக்கப்பட்ட மின்னேற்றத்தை சென்னை ஐஐடியால் நிறுவப்பட்ட பிளக்ஸ்மாா்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

மேம்பால கட்டுமானப் பணி மத்திய கைலாஷ் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணி காரணமாக, மத்திய கைலாஷ் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 1) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு புதன்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் நடைபெறும் 5 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:சென்னை ... மேலும் பார்க்க