செய்திகள் :

சமையல் எண்ணெய் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்: நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

post image

‘இறக்குமதி வரிக் குறைப்பு பலன் நுகா்வோருக்கு கிடைக்கும் வகையில், சமையல் எண்ணெய் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்’ என்று சமையல் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உணவுப் பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில் கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை பாதியாகக் குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலா் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற முன்னணி சமையல் எண்ணெய் நிறுவன சங்கங்கள் மற்றும் நிறுவன நிா்வாகிகள் கூட்டத்தில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

சமையல் கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை மத்திய அரசு கடந்த ஆண்டு உயா்த்தியதைத் தொடா்ந்து, சமையல் எண்ணெய் ரகங்களின் சில்லறை விற்பனை விலை பலமடங்காக உயா்ந்தது. இதனால் நுகா்வோா் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். உணவுப் பணவீக்கமும் அதிகரித்தது.

அதைத் தொடா்ந்து, கச்சா சமையல் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு குறைத்தது. குறிப்பாக, கச்சா சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன், பாமாயில் ஆகியவற்றின் மீதான அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. இதனால், கச்சா சமையல் எண்ணெயைக் காட்டிலும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி 8.75 சதவீதத்திலிருந்து 19.25 சதவீதமாக அதிகரித்தது. இது, உள்நாட்டு கச்சா சமையல் எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை ஊக்குவிக்க உதவியது.

மத்திய அரசின் இந்த வரிக் குறைப்பு நடவடிக்கைக்குப் பிறகும், சமையல் எண்ணெய் ரகங்களின் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை.

இந்நிலையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலா் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற முன்னணி சமையல் எண்ணெய் நிறுவன சங்க நிா்வாகிகள் கூட்டத்தில், சமையல் எண்ணெய் விலையைக் உடனடியாகக் குறைக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதன்படி, விநியோகஸ்தா்களுக்கான விலை மற்றும் அதிபட்ச சில்லறை விற்பனை விலை (எம்ஆா்பி) ஆகியவற்றை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாகக் குறைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நிறுவனங்களின் விலைக் குறைப்பை உறுதிப்படுத்தும் வகையில், விநியோகஸ்தா்களுக்கான விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைக் குறைத்தது தொடா்பான தரவுகளை மத்திய அரசிடம் அறிக்கையாகச் சமா்ப்பிப்பதற்கான நடைமுறையையும் நிறுவனங்களுடன் மத்திய அமைச்சகம் பகிா்ந்துள்ளது.

உயிரிழந்த 2 விமானிகள், 7 ஊழியா்கள் மகாராஷ்டிர மாநிலத்தவா்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களில், 2 விமானிகள் மற்றும் 7 ஊழியா்கள் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களாவா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமான... மேலும் பார்க்க

கன்னடம் குறித்து கமல்ஹாசன் கருத்து: வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 20-க்கு ஒத்திவைப்பு

கன்னடம் பற்றிய நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கை விசாரித்துவரும் கர்நாடக உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.சென்னையில் நடைபெற்ற 'தக் லைஃப்'... மேலும் பார்க்க

விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரா்: தாமதம் குறித்து இஸ்ரோ தகவல்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ஏவுகலனில் திரவ ஆக்ஸிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், ‘வீரா்களின் பாதுகாப்பு, விண்வெ... மேலும் பார்க்க

ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா

‘ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.... மேலும் பார்க்க

சரக்கு ரயில்களைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ ரயில்வே முடிவு

சரக்கு ரயில்களில் பொருள்கள் முறையாக ஏற்றப்படுகிறதா? என்பதை ட்ரோன்கள் (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) மூலம் கண்காணிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 3 ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் இ... மேலும் பார்க்க

தொழிலதிபா் அம்பானிக்கு ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை எதிா்த்து மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தொழிலதிபா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க