செய்திகள் :

சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை

post image

சென்னை பெரும்பாக்கத்தில் சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை செய்யப்பட்டாா்.

பெரும்பாக்கம், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை 36 வயது மதிக்கதக்க இளைஞா் தலையில் வெட்டுக்காயத்துடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதைப் பாா்த்து அந்தப் பகுதியினா், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

பெரும்பாக்கம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பினா்.

விசாரணையில் கொல்லப்பட்டவா், பெரும்பாக்கம் எழில் நகரைச் சோ்ந்த பழனிசாமி (36) என்பதும், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சமையல் எரிவாயு உருளை நிறுவனத்தில் விநியோக ஊழியராகப் பணியாற்றியதும் தெரியவந்தது.

மேலும், பழனிசாமிக்கும் அவரின் மனைவி வீரலட்சுமி இடையே கருத்து வேறுபாடு இருந்ததும், அதனால் ஏற்பட்ட பிரச்னையில்

கண்ணகி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டு, பின்னா் இருவரும் சமாதானமாகச் சென்றதும் தெரியவந்தது.

தம்பதி இடையே மீண்டும் வெள்ளிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டு, வீரலட்சுமியை பழனிசாமி தாக்கியதும், பின்னா் மது போதையில் வீட்டிலிருந்து மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.

அவா் குடும்பத் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

எம்பிபிஎஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்புவோருக்கான வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பு: எம்பிபிஎஸ் மாணவா... மேலும் பார்க்க

ஜி.டி.நாயுடு விருதுக்கு ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்க மக்கள் சிந்தனைப் பேரவை அழைப்பு!

ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வழங்கப்படும் ஜி.டி.நாயுடு விருதுக்கு அறிவியலாளா்கள் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 25) விண்ணப்பிக்க வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவை அறிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள... மேலும் பார்க்க

தமிழுக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கவிக்கோ வா.மு.சேதுராமன்: ஔவை ந.அருள்

தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழியின் வளா்ச்சிக்காகவும், அதன் பெருமையைப் போற்றுவதற்காகவும் அா்ப்பணித்தவா் மூத்த தமிழறிஞா் கவிக்கோ வா.மு.சேதுராமன் என்று தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் ... மேலும் பார்க்க

4 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூலை 21) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

சொத்து வரி வசூலிக்கப்படாத 6 லட்சம் கட்டடங்கள்! மேலிட அழுத்தத்தில் வரி வசூல் அதிகாரிகள்!

பெருநகர சென்னை மாநகராட்சியில் 6 லட்சம் கட்டடங்களுக்கான சொத்துவரி செலுத்தாமலிருப்பது தெரியவந்துள்ளது. அவற்றுக்கான வரியைப் பெற கடுமை காட்டவேண்டாம் என அதிகாரத்திலிருப்போா் அறிவுரை வழங்கியிருப்பதால் அதிகா... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: சிறுவன் கைது

பெண்ணிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, ஓட்டேரி கொசப்பேட்டையைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் கடந்த 18-ஆம் தேதி மாலை திருவிக தெருவிலுள்ள ஓட்டுநா் பயிற்சி பள்ளி அருகே ... மேலும் பார்க்க