செய்திகள் :

சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்படுவது அவ்வளவு எளிதல்ல: அஜித் அகர்கர்

post image

சர்வதேச போட்டிகளில் அணியின் கேப்டனாக செயல்படுவது எளிதான விஷயமாக இருக்காது என இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இதையும் படிக்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத இளம் வீரர்கள்!

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

அஜித் அகர்கர் கூறுவதென்ன?

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச போட்டிகளில் அணியின் கேப்டனாக செயல்படுவது அவ்வளவு எளிதான விஷயமாக இருக்கப் போவதில்லை என அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் கடிமனான அனுபவமாக இருக்கலாம் அல்லது உண்மையில் சிறந்த தொடராக அமையலாம். இந்த தொடர் கடினமாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. அனுபவங்களே இந்திய அணியை முன்னோக்கி நகரச் செய்யும்.

தற்போது, ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அவருக்கு கண்டிப்பாக கடினமாக இருக்கப் போகிறது. சர்வதேசப் போட்டிகளில் அதிக சவால்கள் நிறைந்திருக்கும். இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றத்தை சந்தித்து வருகிறது. மூத்த வீரர்களில் இருவர் தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். அதனால், கேப்டன் பொறுப்பு மிகவும் சவாலானதாக இருக்கப் போகிறது.

இதையும் படிக்க: ரோஹித் சர்மா, விராட் கோலி இடத்தை நிரப்புவது கடினம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

ஷுப்மன் கில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் மிகச் சிறந்த வீரர். எங்கள் அனைவருக்கும் அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. கேப்டனை ஓரிரு மணி நேரங்களில் அவர்களது செயல்பாட்டினை வைத்து தேர்வு செய்துவிட முடியாது. கேப்டனாக நியமிக்கப்பட உள்ளவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கவனித்தே அவர்களுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படுகிறது.

ஷுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதை சரியான முடிவாக கருதுகிறோம். கடந்த ஆண்டில் அவரது விளையாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் நாங்கள் கவனித்தோம். அவரிடம் நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்றார்.

ஜிம்பாப்வே டெஸ்ட்: பந்துவீச்சில் அசத்திய சோயப் பஷீர்; இங்கிலாந்து அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன் த... மேலும் பார்க்க

இது வெறும் ஆரம்பம் மட்டுமே... இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றது குறித்து சாய் சுதர்சன்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து தமிழக வீரர் சாய் சுதர்சன் பேசியுள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வ... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார்: அஜித் அகர்கர்

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5... மேலும் பார்க்க

8 ஆண்டுகளுக்குப் பிறகு கருண் நாயருக்கு கிரிக்கெட் கொடுத்த மற்றொரு வாய்ப்பு!

8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பை கருண் நாயருக்கு கிரிக்கெட் கொடுத்துள்ளது.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத இளம் வீரர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இரண்டு இளம் வீரர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் அணியில் இடம்பெறவில்லை.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொ... மேலும் பார்க்க

தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு! இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில்..!

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு முதல் முறையாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்... மேலும் பார்க்க