செய்திகள் :

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் கிறிஸ் கெயில்!

post image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் விளையாடவுள்ளார்.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கி மார்ச் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரானது நவி மும்பை, ராஜ்காட் மற்றும் ராய்பூரில் நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க: சஞ்சு சாம்சனுக்கு காயம்; மீண்டும் அணியில் இடம்பெறுவாரா?

இந்தத் தொடரில் இந்தியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடவுள்ளனர். இந்தத் தொடரில் விளையாடவுள்ளதை இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அண்மையில் உறுதி செய்தார்.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் கிறிஸ் கெயில்

பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், கிறிஸ் கெயில், மக்கயா நிட்னி மற்றும் மாண்டி பனேசர் போன்ற முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக கிறிஸ் கெயில் கூறியதாவது: சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து, மிகப் பெரிய தருணங்களை சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் உருவாக்க உள்ளது. இந்தத் தொடரில் யுனிவர்ஸ் பாஸ் எனர்ஜியைக் கொண்டுவர நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

இதையும் படிக்க: டி20 போட்டிகளில் அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புகிறோம்: கௌதம் கம்பீர்

இது தொடர்பாக மக்கயா நிட்னி பேசியதாவது: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடவுள்ள இந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் மிகவும் நினைவுகூரத்தக்கதாக இருக்கப் போகிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தத் தொடர் கண்டிப்பாக மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றார்.

அபிஷேக் சர்மா இன்னும் அதிகமாக பந்துவீச வேண்டும்; முன்னாள் இந்திய வீரர் வலியுறுத்தல்!

அபிஷேக் சர்மா இன்னும் அதிகமான ஓவர்கள் பந்துவீச வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்ட... மேலும் பார்க்க

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 4 பேருக்கு இடம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது.19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. மலேசியாவில் நடைப... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கான போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை தொடக்கம்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. போட்டிகள் ... மேலும் பார்க்க

சஞ்சு சாம்சனுக்கு காயம்; மீண்டும் அணியில் இடம்பெறுவாரா?

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் (பிப்ரவரி 2) நிறைவடைந்தது. நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்ட... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புகிறோம்: கௌதம் கம்பீர்

டி20 போட்டிகளில் இந்திய அணி அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புவதாக தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் (பிப்ரவரி ... மேலும் பார்க்க

அபிஷேக் சர்மாவுக்கு ஜோஸ் பட்லர் பாராட்டு!

இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மாவை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பாராட்டியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத... மேலும் பார்க்க