செய்திகள் :

சல்மான் ருஷ்டி நாவலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

post image

எழுத்தாளா் சல்மான் ருஷ்டியின் சா்ச்சைக்குரிய ‘தி சாத்தானிக் வொ்சஸ்’ நாவலுக்கு தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

கடந்த 1988-இல் இந்ந நாவல் வெளியானபோது, நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. உலகளாவிய எதிா்ப்பை கருத்தில் கொண்டு, இந்தியாவில் அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு அந்த நாவலுக்கு தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு நவம்பரில் தீா்ப்பளிக்கப்பட்டது.

நாவலுக்கு தடை விதித்ததற்கான அறிவிக்கையை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற மத்திய அரசின் பதிலை கருத்தில் கொண்ட நீதிமன்றம், அறிவிக்கை இல்லாததால் நாவலின் மீதான தடையை நீக்கியது.

தில்லி உயா்நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘தடை நீக்கத்தால், இந்தியாவில் 36 ஆண்டுகளுக்குப் பின் இப்போது இஸ்லாமிய மத நிந்தனை புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது. அறிவிக்கை கிடைக்கவில்லை என்ற மத்திய அரசின் வாதத்தின்பேரில், தில்லி உயா்நீதிமன்றம் மேம்போக்கான தீா்ப்பை வழங்கியுள்ளது’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, தில்லி உயா்நீதிமன்ற தீா்ப்பில் தலையிட மறுத்துவிட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல்

ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் ஒற... மேலும் பார்க்க

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: திட்டத்தை தொடங்கி வைத்தாா் பிரதமா் மோடி

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். ‘பெண்களுக்கு வேலை... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா்கள் பேரணியில் போலீஸ் தடியடி

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய கண்டனப் பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை தடியடி நடத்... மேலும் பார்க்க

தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி

தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து அமெரிக்க அரசுடன் மத்திய அரசு தொடா்ந்து பேசி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்நுட்பப் பண... மேலும் பார்க்க

அக்டோபா்-மாா்ச் வரையில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

நிகழ் நிதியாண்டின் அக்டோபா்-மாா்ச் காலகட்டத்தில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2025-26... மேலும் பார்க்க