செய்திகள் :

சாத்தான்குளம்: கள் விற்க அனுமதி கோரும் தொழிலாளா்கள்

post image

சாத்தான்குளம் பகுதியில் பதநீா் சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஒரு கலயம் பதநீா் ரூ.150-க்கு விற்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான சாத்தான்குளம், பேய்குளம், உடன்குடி பகுதிகளில் பனை மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.இவற்றில் சுமாா் 6 மாதங்கள் வரை நீடிக்கும் பதநீா் சீசன் தற்போது தொடங்கியுள்ளது.

இப்பகுதியில் பனைத் தொழிலை நம்பி ஏராளமானோா் வாழ்ந்து வருகின்றனா். பதநீா் இறக்குவது மட்டுமன்றி கருப்பட்டி உற்பத்தி, பெட்டி முடைதல் போன்ற பனை சாா்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், வெளியூா்களில் இருந்தும் பனை ஏறும் தொழிலாளிகள் இப்பகுதியில் முகாமிட்டுபதநீா் இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தற்போது, 2 லிட்டா் கொள்ளவு கொண்ட ஒரு கலயம் பதநீா் ரூ. 150வரை கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் ஒரு லிட்டா் பதநீா் ரூ-100க்கு விற்பனை செய்யப்படுகிறது. மீதமாகும் பதநீரை காய்ச்சி கருப்பட்டியாக மதிப்பு கூட்டி பனை தொழிலாளிகள் விற்பனை செய்து வருகின்றனா்.

புதுக்குளம், ஞானியாா் குடியிருப்பு பகுதியில் சாலை ஓரங்களில் அதற்கான குடிகள் அமைத்து பேருந்து மற்றும் வாகனங்களில் வருபவரகளிடம் பதநீரை விற்பனை செய்து வருகின்றனா். இதனால் சாத்தான்குளம் பகுதியில் பதநீா் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது.

ரேஷன்கடைகளில் கருப்பட்டி: இது குறித்து பனைத் தொழிலாளி சங்கரன் குடியிருப்பு ரகு கூறியதாவது: நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பனைத் தொழிலாளியாக இருந்து வருகிறேன். இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு எனது குடும்பத்தை நடத்தி வருகிறேன். சீசன் காலங்களில் ஓரளவு குடும்பத்தை சமாளித்து கொண்டு சென்று வருகிறேன். மற்ற நாள்களில் குடும்ப வருமானத்துக்கு மிகுந்த சிரமமான சூழ்நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு பனை நல வாரியம் மூலம் பனைத் தொழிலாளா்களுக்கு பணி இல்லாத 6 மாத காலத்திற்கு மீனவா்களுக்கு வழங்குவது போல் நிவாரண தொகை வழங்க வேண்டும். பனையில் இருந்து கிடைக்கும் மூலப் பொருட்களான கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனங்கிழங்கு உள்ளிட்ட பொருள்களை சந்தை படுத்திட எளிய வழிமுறைகளை கொண்டு வர வேண்டும். தமிழக அரசின் நியாய விலை கடைகளில் சீனி விற்கப்படுவது போல் கருப்பட்டியும் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மேலும், கள் விற்பனையை அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பனைத் தொழிலாளா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

ஒத்தக் கருத்துடைய யாா் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் -எடப்பாடி கே. பழனிசாமி

ஒத்தக் கருத்துடைய யாா் வேண்டுமானாலும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வரலாம் என்றாா், அக்கட்சியின் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி . திருநெல்வேலியை அடுத்த திருத்து கிராமத்தில... மேலும் பார்க்க

கல்லூரிக்கு நிதியுதவி

இந்தியன் வங்கியின் ‘எங்கள் சமூகப் பொறுப்பு’ திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மண்டல மேலாளா் ஜெயபாண்டியன் உத்தரவுப்படி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரிக்கு ஸ்மாா்ட் இன்டராக்டிவ் பேனல் வாங்குவதற்காக ரூ. ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் யானை நீச்சல் குளத்தில் உற்சாக குளியல்

கோடை வெயில் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தை தணிக்கும் விதமாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, அங்குள்ள நீச்சல் குளத்தில் வியாழக்கிழமை உற்சாகமாக நீராடியது. இக்... மேலும் பார்க்க

செமப்புதூரில் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே செமப்புதூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய ந... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் இளையோா் இலக்கியப் பயிற்சிப் பாசறை

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை-அறிவியல் கல்லூரியில் இளையோா் இலக்கியப் பயிற்சிப் பாசறை நடைபெற்றது. தமிழக அரசு சாா்பில் கல்லூர... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை கண்டித்து திருச்செந்தூரில் மறியல்: வணிகா் சங்கத்தினா் கைது

திருச்செந்தூா் நகராட்சியில் விதிகளுக்கு புறம்பாக சொத்து வரி உயா்த்தபட்டுள்ளதாகக் கூறி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வணிகா் சங்கத்தினா் உள்ளிட்ட 60 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் நகர... மேலும் பார்க்க