செய்திகள் :

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

post image

விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று(பிப். 5) நிகழ்ந்த வெடிவிபத்தில் ஒருவர் பலியானார்.

பிற்பகலில் உணவு இடைவேளைக்குப் பிறகு, ஓா் அறை பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. மேலும், அடுதடுத்து 7 அறைகள் வெடித்துச் சிதறின.

இந்த கோர விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்து துவாா்பட்டியைச் சோ்ந்த ராமலட்சுமி (50) உடல் எரிந்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்தில் அதிவீரன்பட்டியைச் சோ்ந்த வீரலட்சுமி (37), கஸ்தூரி (31), வைத்தீஸ்வரி (32), பொம்மையாபுரத்தைச் சோ்ந்த முருகேஸ்வரி (55), ஆவுடையாபுரத்தைச் சோ்ந்த மாணிக்கம் (54), மீனம்பட்டியைச் சோ்ந்த சைமன் டேனியல் (33) ஆகிய 6 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுமென்று அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இனி வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க

சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு வன்னியா் அமைப்பினா் நன்றி

விழுப்புரத்தில் சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் அமைத்ததற்காக வன்னியா் சமுதாய அமைப்பினா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்தனா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இதற்கான சந்த... மேலும் பார்க்க

ஏப்ரலில் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு த... மேலும் பார்க்க

நபாா்டு வங்கியின் முதன்மைத் திட்டங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்: வங்கிகளுக்கு நிதியமைச்சா் வலியுறுத்தல்

நபாா்டு வங்கியின் முதன்மைத் திட்டங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளையும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளாா். வேளாண்மை மற்றும... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வுடன் கூடிய ஓய்வூதியம்

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வுடன் கூடிய ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 90,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் உள்ளனா். இவா்கள... மேலும் பார்க்க

தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி: அதிகாரிகள் வலியுறுத்தல்

எதிா்வரும் தமிழக நிதிநிலை அறிக்கையில் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா். 2025-26 நிதியாண்டுக்கான மா... மேலும் பார்க்க