செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா வெல்லும்! -முன்னாள் கேப்டன் நம்பிக்கை

post image

சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா வெல்லும் என்று முன்னாள் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் நடைபெறவிருக்கிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் பல ஜாம்பவான்களைக் கொண்ட அணியான தென்னாப்பிரிக்கா பல ஆண்டுகளாக ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. மேலும், ஆடவர், மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இறுதி வரை வந்து தோல்வியைத் தழுவியது. மேலும், 19 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியிலும் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவிருக்கிறது.

குஜராத் டைட்டன்ஸை வாங்கும் டோரண்ட் குழுமம்!

இதுகுறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேமி ஸ்மித் கூறுகையில், “தென்னாப்பிரிக்காவின் நீண்டகால ஐஐசி கோப்பைக்கான தாகம், 2027 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் நடத்துவதற்கு முன்னரே முடிவுக்கு வரவுள்ளது.

2027 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன்னதாக தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் விளையாடவிருக்கிறது. தற்போதைய சூழலில் கிரிக்கெட் சாதாரணமாக இருக்காது. அதனால், நீங்க செய்யவேண்டிய செய்துகொள்ளலாம்.

தென்னாப்பிரிக்கா தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. டி20 கிரிக்கெட் இன்னும் வளரவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். இது அமெரிக்கா வரை பரவியிருப்பதை நாம் காண்கிறோம். கூடிய விரைவில் ஒலிம்பிக்கில் பார்க்க விருக்கிறோம்.

இந்திய கிரிக்கெட் அணி அடிக்கடி வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மற்ற நாடுகளுக்கு வருவாய் வழங்குவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

ஆனால் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் ஆப்பிரிக்க நாடுகளுடனோ அல்லது பிற நாடுகளுடனோ ஈடுபடாமல் ஒருவருக்கொருவர் மட்டுமே விளையாடினால், டெஸ்ட் கிரிக்கெட் வணிக ரீதியாக கடினமாகிவிடும்” என்றார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்சிபி..! எல்லிஸ் பெர்ரியின் அதிரடி வருகை!

21 சதங்கள்.. 39 அரைசதங்கள்.. 7200 ரன்கள்.. ஓய்வை அறிவித்த கேகேஆர் நட்சத்திரம்!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஷெல்டன் ஜாக்சன் ஓய்வை அறிவித்துள்ளார். 15 வருடங்களாக விளையாடிவரும் சௌராஷ்டிரா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஷெல்டன் ஜாக்சன் செவ்வாய்க்கிழமை கிரிக்கெட்டில் இருந... மேலும் பார்க்க

நடுவர் நிதின் மேனன் விலகல்! சாம்பியன்ஸ் டிராபிக்கான நடுவர்கள் யார்? -முழு விவரம்

சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடரில் இருந்து இந்திய நடுவர் நிதின் மேனன் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், சாம்பியன்ஸ் டிராபிக்கான நடுவர்கள் யார்? என்பதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.இந்தியா, பாகிஸ்தான்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஜேக்கப் பெத்தேல் விலகல்! மாற்று வீரர் யார்?

சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் ஜேக்கப் பெத்தேல் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்... மேலும் பார்க்க

அசத்திய ஷர்துல் தாக்குர்..! காலிறுதியில் மும்பை வெற்றி!

ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது. ஹரியாணா, மும்பை அணிக்கு நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மும்பை அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஞ்சி கோப்பை வ... மேலும் பார்க்க

ஆஸி. ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்டில் ... மேலும் பார்க்க

கம்பீர் செய்வது சரியில்லை..! முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் விமர்சனம்!

முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முடிவுகளை விமர்சித்து பேசியுள்ளார். இந்திய அணி தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து வந்தன. த... மேலும் பார்க்க