செய்திகள் :

`சாலையில் 20 அடி குழி; விழுந்து தம்பதி உயிரிழப்பு' - ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

post image

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள சேர்வைக்காரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (42). பழவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார்.

நாகராஜ் மனைவி ஆனந்தி ( 38), மகள் தீட்ஷிதா (13), மகன் ரித்தீஷ். நாகராஜ், அவரது மனைவி ஆனந்தி, மகள் தீட்ஷிதா ஆகிய மூவரும் ஆன்மிகப் பயணமாக கோயில்களுக்குச் சென்றுவிட்டு கடந்த மே 3-ஆம் தேதி நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளனர்.

குள்ளாய்பாளையம் என்ற பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, சாலையின் மத்தியில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட 20 அடி ஆழமான குழியின் மேற்பரப்பில் எந்தவித எச்சரிக்கை பலகையும் இல்லாததால், அந்தக் குழியில் விழுந்து நாகராஜும், ஆனந்தியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலி
பலி

இந்த விபத்தில் கால் உடைந்து சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தீட்ஷிதாவை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக விகடன் பிளஸ் இணைய இதழ் மற்றும் நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் 6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தெலங்கானா: பிறந்த குழந்தை மீது போதையில் படுத்த தந்தை; பதறிப்போன தாய்; குழந்தைக்கு நேர்ந்த சோகம்

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கானாபூர் அருகில் உள்ள சீமல்பல்லி என்ற இடத்தில் வசிப்பவர் சேகர்(22). கூலித்தொழிலாளியான சேகர் மனைவி சுஜாதாவிற்குக் கடந்த 28 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தி... மேலும் பார்க்க

ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த விமானம்; பயணிகள் அலறல்.. பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி

டெல்லியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று ஸ்ரீநகருக்கு புறப்பட்டது 6E2142 என்ற இண்டிகோ விமானம். அந்த விமானத்திலிருந்து பயணிகளில் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. அந்த வீ... மேலும் பார்க்க

சிவகங்கை பயங்கரம் : கல் குவாரியில் பாறை சரிந்து 5 பேர் உயிரிழப்பு; சோகத்தில் மக்கள்

சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை பகுதியில் மேகா புளு மெட்டல் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் விதிமீறல்கள் நடப்பதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்து வந்துள்ளத... மேலும் பார்க்க

Sunset: சூரியன் மறைவதை போட்டோ எடுக்க முயன்ற மாணவி; 7-வது மாடியில் தவறி கீழே விழுந்து மரணம்

மும்பை தகிசர் கிழக்கு பகுதியில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் வசித்தவர் மாணவி ஜான்வி (16). இவர் அங்குள்ள பள்ளியில் 10-வது வகுப்பு படித்து வந்தார். ஜான்வி மாலை நேரத்தில் தனது தந்தையுடன் நடைபயிற்சி சென்றபோ... மேலும் பார்க்க

திருப்பூர்: சாயக்கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது தாக்கிய விஷவாயு; இருவர் பலி... மூவர் கவலைக்கிடம்!

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் பகுதியில் தனியார் சாயத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள சாயக்கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் திங்கள்கிழமை மாலை ஐந்து பேர்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: உரிமம் பெறாத பட்டாசு ஆலை வெடித்து 2 பேர் பலி - ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் சர்புதீன் இவர் விழாக்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு விற்பனை செய்து வந்தார். நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த இவரது மகன் அப்பாஸ் வெளிநாடு... மேலும் பார்க்க