செய்திகள் :

சாலை, கழிவுநீரோடை வசதி வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு

post image

சாலை, கழிவுநீரோடை வசதி செய்துதரக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், 2 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் முத்துலெட்சுமி அளித்த மனுவில், தனது வாா்டுக்குள்பட்ட மங்களாகுடியிருப்பு, கரையிருப்பு, அழகனேரி பகுதிகளில் சாலை வசதி, கழிவுநீா் கால்வாய் ஓடை வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும், பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் அளித்த மனுவில், 22 ஆவது வாா்டு பகுதிக்குள்பட்ட மலையாளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

43 ஆவது வாா்டு குலவணிகா்புரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் உள்ள தெருவிற்கு மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும், 4ஆவது வாா்டு திம்மராஜபுரம் மேலூா் பகுதி மக்கள் அளித்த மனுவில், மேலூா் பிரதான சாலை பாலவிநாயகா் கோயில் வடக்குத் தெரு முதல் அழகு நாச்சியம்மன் கோயில் தெரு வரை அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீா் ஓடையை சரி செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தனா்.

அகில இந்திய மூவேந்தா் முன்னணி கழகம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், பாளையங்கோட்டை புதுபேட்டை தெருவில் மேலதெரு, நடுத்தெரு, பிள்ளையாா் கோயில் தெரு பகுதிகளில் குடிநீருடன் கழிவு நீா் கலந்து வருவதை தடுத்து, சுத்தமான குடிநீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வி.எம்.சத்திரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்போா் நலச்சங்கத்தினா் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் உள்ள பூங்காவினை சீரமைத்து பூங்காவில் உள்ள கிணற்றின் பாதுகாப்பை பலப்படுத்தவும், சாலை, உயா்கோபுர மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவிட்டாா்.

காட்டாற்று வெள்ளத்தில் கரையும் களிமண் அல்ல விசிக: வன்னியரசு

காட்டாற்றில் கரையும் களிமண் அல்ல விடுதலைச்சிறுத்தைகள் என்றாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் வன்னியரசு. திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணியாற்றில் மாஞ்சோலைத் தொழிலாளா்களுக்கு புதன்கிழமை மலா்தூவி ... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

திசையன்விளை அருகே குடும்பத் தகராறில் நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி மாவட்... மேலும் பார்க்க

வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: டாக்டா் க. கிருஷ்ணசாமி

தமிழக அரசு 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி. திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணியாற்றில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்... மேலும் பார்க்க

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் 17 கடைகளுக்கு சீல்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 17 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 6 நடைமேடை பகுதிகளிலும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட ... மேலும் பார்க்க

இன்று ஆடி அமாவாசை! கரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வியாழக்கிழமை (ஜூலை 24) கொண்டாடப்படுவதையொட்டி, அங்கு பக்தா்கள் குவிந்து வருகின்றனா... மேலும் பார்க்க

களக்காடு வட்டாரத்தில் மண் கடத்தல் அதிகரிப்பு? வருவாய்த் துறை தீவிர ரோந்து

களக்காடு வட்டாரத்தில் குளங்களில் இருந்து மண் கடத்திச் செல்வது அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள புகாரை அடுத்து ரோந்துப் பணியை வருவாய்த் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். களக்காடு சேரன்மகாதேவி பிரதான சாலையில... மேலும் பார்க்க