செய்திகள் :

சாலை மறியல்: போக்குவரத்து தொழிலாளா்கள் கைது

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, சென்னை பல்லவன் இல்லம் முன் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அண்ணா சாலையில் உள்ள பெரியாா் சிலை அருகே திரண்ட சிஐடியு சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களுடன் காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, போலீஸாா் அவா்களையும் கைது செய்தனா். இந்த நிலையில், மீண்டும் சிறிது நேரத்தில் அண்ணாசிலை அருகே சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராசன் தலைமையில் கூடிய ஏராளமான போக்குவரத்து தொழிலாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனா்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளன பொதுச் செயலா் கே.ஆறுமுக நயினாா், துணைத் தலைவா் வி.தயானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க