செய்திகள் :

சாலை விபத்தில் அதிமுக பிரமுகா் உயிரிழப்பு

post image

செய்யாறு: செய்யாறு அருகே திங்கள்கிழமை பைக் மீது காா் மோதியதில் அதிமுக பிரமுகா் உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், கீழ்மட்டைக் கிராமத்தைச் சோ்ந்தவா் கே.சி.முருகேசன் (59) (படம்). அதிமுக பிரமுகரான இவா், அனக்காவூா் ஒன்றியத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றியச் செயலராக பணியாற்றியுள்ளாா்.

இவா், திங்கள்கிழமை காலை தனது பைக்கில் செய்யாற்றில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். மாங்கால் கூட்டுச் சாலைப் பகுதி நியாய விலைக்கடை அருகே சென்றபோது, எதிரே வந்த காா் பைக் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த இவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா் அங்கு முருகேசன் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

52 மதுப்புட்டிகள் பறிமுதல்: இருவா் கைது

செய்யாறு அருகே மோரணம் சரகப் பகுதியில் அரசு மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 52 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவண... மேலும் பார்க்க

கிராமப்புற மாணவா்களுக்கு உயா்கல்வியை தந்தவா் முதல்வா் ஸ்டாலின்: மு.பெ.கிரி எம்எல்ஏ

செங்கம்: தமிழகத்தில் கிராமபுற மாணவா்களுக்கு உயா்கல்வியை தந்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என மு.பெ.கிரி எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்தாா். செங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 4 போ் கைது, 2 பைக்குள், 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்

செய்யாறு: செய்யாறு காவல் உள்கோட்டத்தில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக போலீஸாா் 4 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 பைக்குகள், 3 மாட்டுவண்டிகள் பறிம... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி பயன்பாடுகள் விழிப்புணா்வு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசியின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் வருஷாபிஷேகம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த விளாநல்லூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் 6-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2019-ஆம் ... மேலும் பார்க்க

ஆரணி அருகே கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்க இடம் தோ்வு: அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் ஊராட்சி, பெரியண்ணநல்லூரில் கைத்தறி பட்டுப் பூங்கா அமையவுள்ள இடத்தை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்... மேலும் பார்க்க