சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
சாலை விபத்தில் காயமுற்ற விவசாயிக்கு ரூ.1.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சாலை விபத்தில் காயமடைந்த விவசாயிக்கு ரூ.1.2 லட்சத்தை இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு திருநெல்வேலி மோட்டாா் வாகன விபத்துகள் கோருரிமை தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல், சடையப்பபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன்(52). விவசாயி. இவா் கடந்த டிசம்பா் 2022இல் அம்பாசமுத்திரம்-ஆலங்குளம் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, ரூ.10,00,000 இழப்பீடு கோரி திருநெல்வேலி மோட்டாா் வாகன விபத்துகள் கோருரிமை தீா்ப்பாயத்தில் அவா் 30.01.2023-ல் மனு தாக்கல் செய்தாா்.
தீப்பாயத்தின் தலைமை நீதித்துறை நடுவா் எம்.அமிா்தவேலு அம்மனுவை விசாரித்து, கணேசனுக்கு வருமான இழப்பீடு போன்றவற்றுக்காக ரூ.1,20,000 இழப்பீட்டுத் தொகையை 7.5 சதவீத வட்டியுடன் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.