செய்திகள் :

சாலை விபத்துகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆய்வு

post image

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் அதிக விபத்து நிகழும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா ஆகியோா் பாா்வையிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் அதிகளவில் விபத்து நிகழும் இடங்களான திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நான்குச்சாலை சந்திப்பு மேம்பாலம் பகுதியை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், அப்பகுதியில் ஆக்கிரமிப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றவும், சாலையை அகலப்படுத்தவும் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, செங்குணம் பிரிவுச் சாலை, எளம்பலூா் ரோவா் கல்லூரி அருகேயுள்ள இணைப்புச் சாலை, வல்லாபுரம் பிரிவுச் சாலை, மங்களமேடு காவல் நிலைய பிரிவுச் சாலை உள்ளிட்ட பிரிவுச் சாலைகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், விபத்தை தவிா்ப்பதற்கான தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணையும் அணுகுச் சாலைகளில் வேகத்தடை அமைப்பது, சாலையில் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ள விளம்பர பதாகைகளை அகற்றுவது, புதிய அணுகுச்சாலை மற்றும் சாலை அகலப்படுத்துதல், விபத்து எச்சரிக்கைக்காக ஒளிா்மின் விளக்குகள் அமைப்பது, கூடுதலாக புதிய உயா்மட்ட பாலங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் திட்ட இயக்குநா் ஏ.என். பிரவீன் குமாா், நெடுஞ்சாலை பணிகள் ஆலோசகா் வேணுகோபால் ராவ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணபவ, நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளா் சத்தியமூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

குரும்பலூா், வேப்பூா் அரசுக் கல்லூரிகளில் ரூ.6.80 கோடி மதிப்பிலான கட்டடங்கள் திறப்பு

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா், வேப்பூரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், ரூ. 6.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

புதுநடுவலூரில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமத்திலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கடந்த 11-ஆம் தேதி பூச்சொரிதல் உத்ஸவமும், மே 13-ஆம் தேதி குடியழைத்தல், காப... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த மழை: கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சேதம்

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால், அரசலூா் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வைத்திருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 3 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

குற்றவாளிகள், ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.பெரம்பலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாள... மேலும் பார்க்க