செய்திகள் :

சாவர்க்கர் வழக்கில் ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

post image

சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தெரிவித்ததாவது, ராகுல் காந்தியின் கருத்துகள் கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவராக அவரது கருத்துகள் பொறுப்பற்றவையாகக் கொள்ளப்படுகிறது. இனிவரும் காலங்களில், இவ்வாறு சுதந்திரப் போராட்ட வீரர்களை கேலி செய்ய வேண்டாம். மகாத்மா காந்திகூட ஆங்கிலேயர்களைத் தொடர்புகொண்டபோது, உங்களின் விசுவாசமான ஊழியர் என்று குறிப்பிட்டது, ராகுல் காந்திக்கு தெரியுமா? அவர்கள் நமக்கு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தனர்; ஆனால், அவர்கள் மீது நீங்கள் இவ்வாறான கருத்துகளைக் கூறுகிறீர்கள்.

மகாராஷ்டிர மாநிலம், அலோகாவில் கடந்த 2023ஆம் ஆண்டில், பாரத் ஜோடோ நடைப்பயணத்தின்போது செய்தியாளர்களுடன் பேசும்போது சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக லக்னெள மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் போன்றோர் சிறையில் வாடியிருந்தபோது, சாவர்க்கர் மட்டும் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியதாகவும், முஸ்லிம் நபர் ஒருவரை சாவர்க்கர் தாக்கியதாக சாவர்க்கரின் புத்தகத்திலேயே குறிப்பிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகள் பாஜக உள்பட பல்வேறு தரப்பினரிடையே கண்டனங்களை எழுப்பியது.

இதனையடுத்து, தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யுமாறு அலாகாபாத் நீதிமன்றத்தில் ராகுல் மனு அளித்தார். இருப்பினும், அவரது மனுவை அலாகாபாத் நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். தன் மீதான அவதூறான சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக சுதந்திரமாகக் கடமையைச் செய்ய தடையாக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவானது, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, மன்மோகன் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ராகுல் காந்தி மீதான அலாகாபாத் நீதிமன்றத்தின் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதையும் படிக்க:பந்திபோராவில் பயங்கரவாதி அல்தாஃப் லல்லியை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்!

பஹல்காம் தாக்குதல் ஹிந்து - முஸ்லீம் பிரச்னை அல்ல! - காஜல் அகர்வால்

பஹல்காம் தாக்குதல் ஹிந்து - முஸ்லீம் பிரச்னை அல்ல என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிர... மேலும் பார்க்க

அட்டாரி-வாகா எல்லை வழியாக நாடு திரும்பிய 191 பாகிஸ்தானியர்கள்

பஞ்சாபின் அட்டாரி-வாகா எல்லை வழியாக வெள்ளிக்கிழமை 191 பாகிஸ்தானியர்கள் நாடு திரும்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: 1000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு!

சிக்கிமின் லாச்செங் மற்றும் லாச்சுங் பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணி சிக்கித் தவித்து வருவதாகவும், முதற்கட்டமாக அங்கு வசிக்கும் 1500 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட... மேலும் பார்க்க

குவாலியர் ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து

குவாலியர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது. மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் ரயில் நிலையத்தில் உள்ள விஐபி விருந்தினர் மாளிகையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டவர்களுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.ராகுல், சோனியாவுக்கு எதிராக நோட்டீஸ் ப... மேலும் பார்க்க

பாட்னா நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிகார் மாநிலம் பாட்னா மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில தலைநகர் பாட்னாவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று (ஏப்.25) அடையாளம் தெரியாத மர்ம ... மேலும் பார்க்க