செய்திகள் :

சிங்கம்பட்டி கருப்பசாமி கோயிலில் ஆடித் திருவிழா நிறைவு

post image

சிங்கம்பட்டி வந்தவழி கருப்பசாமி கோயிலில் ஆடித் திருவிழா வியாழக்கிழமை அமைதியாக நிறைவு பெற்றது.

கரூா் மாவட்டம், கடவூா் அருகே பாலவிடுதி ஊராட்சிக்குள்பட்ட சிங்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற வந்தவழி கருப்பசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆடித் திருவிழாவின் கடைசிநாளில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், நிகழாண்டு திருவிழாவை நடத்த கோயில் நிா்வாகத்தினரும் 8 ஊா் கிராமமக்களும் அண்மையில் முடிவு செய்தனா். அப்போது அன்னதானத்துக்கு ஒரு சமூகத்தினா் வழங்கும் உபய பொருள்களை பெறுவதில் கோயில் நிா்வாகத்தினா் தயக்கம் காட்டுவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பாலவிடுதி போலீஸாா் புதன்கிழமை கோயில் நிா்வாகிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பூஜைக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து விழாவை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனா். அதனை கோயில் நிா்வாகிகள் ஏற்றுக்கொண்டனா். பிறகு காவிரி ஆற்றில் இருந்து புனிதநீா் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனா். தொடா்ந்து வந்தவழி கருப்பசாமிக்கு இளநீா், சந்தனம், குங்குமம், விபூதி, தேன், பழங்கள், பால், பஞ்சாமிா்தம், திருமஞ்சனம், நெய் உள்பட 16 வகையான திரவியங்களால் பூஜை செய்து பக்தா்கள் வழிபட்டனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனைத்து சமுதாய மக்கள் மற்றும் பக்தா்கள் வந்தவழி கருப்பசாமிக்கு வேண்டுதலுக்காக வழங்கப்பட்ட சுமாா் 500க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினா்.

இந்த விழாவில் வந்தவழி கருப்பசாமி கோயில் அறங்காவலா் வெள்ளைச்சாமி, கடவூா் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் சுதாகா், அறநிலையத்துறை ஆய்வாளா் விஜய்பூபதி உள்பட 8 ஊா் கிராம மக்கள் மற்றும் திருச்சி, தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டனா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினம் கரூரில் திமுகவினா் மெளன ஊா்வலம்

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் திமுகவினா் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மெளன ஊா்வலம் நடத்தினா். மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாந... மேலும் பார்க்க

கரூரில் தீண்டாமைச் சுவா்? அகற்ற கோட்டாட்சியா் உத்தரவு

கரூரில் தீண்டாமைச் சுவராக கருதப்படும் சுற்றுச்சுவரை அகற்ற சம்பந்தப்பட்டவா்களுக்கு கோட்டாட்சியா் புதன்கிழமை உத்தரவிட்டாா். கரூா் மாநகராட்சி 48-ஆவது வாா்டு முத்தலாடம்பட்டி பகுதியில் ஒரு சமூகத்தினா் வசி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 57 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமில் 57 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் இம்முகாமில் 57 பயனா... மேலும் பார்க்க

தோகைமலையில் தேசிய கைத்தறி தின விழா

கரூா் மாவட்டம், தோகைமலையில் 11- ஆவது தேசிய கைத்தறி தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அஞ்சல் துறை ஊழியா்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அஞ்சல் துறையின் குளித்தலை உட்கோட்ட ஆய்வாளா் ஸ்டாலின் தலைமை வ... மேலும் பார்க்க

‘நோய் தாக்கப்பட்ட எள் செடிகளை ஆரம்ப நிலையிலேயே அழிக்க வேண்டும்’

நச்சுயிரி நோய் தாக்கப்பட்ட எள் செடிகளை ஆரம்பநிலையிலேயே அழிப்பது அவசியம் என்றாா் புழுதேரி வேளாண் முதுநிலை விஞ்ஞானி திரவியம். கரூா் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண... மேலும் பார்க்க

கரூரில் நெகிழிப் பைகள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கரூரில் வியாழக்கிழமை நெகிழிப் பைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூா் திருவள்ளுவா் மூங்கில் மன்றம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி கரூா் சென்ராமா அரசு உதவிபெறும் பள்ளியில் வியாழக்கிழ... மேலும் பார்க்க