செய்திகள் :

சிதம்பரத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

post image

சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்பட்ட 79 தனியாா் பள்ளிகளின் 389 வாகனங்களில் கூட்டுத் தணிக்கை ஆய்வு சிதம்பரம் - கீரப்பாளையம் புறவழிச் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷண்குமாா் தலைமையில், டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் செல்வம், தனியாா் பள்ளி மாவட்டக் கல்வி அலுவலா் மோகன், இயக்க ஊா்தி ஆய்வாளா் ரவிச்சந்திரன், வட்டாரக் கல்வி அலுவலக கண்காணிப்பாளா் வாசுராஜ் ஆகிய குழுவினா் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்தனா்.

இதில், குறைபாடுகள் கண்டறியப்பட்ட 15 பள்ளி பேருந்துகளின் தகுதிச்சான்றை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஆய்வில் 232 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது.

மேலும், பள்ளி வாகனங்களில் தீ விபத்து நிகழும்போது, மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி எவ்வாறு தீயை அணைப்பது மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு எவ்வகையில் முதலுதவி செய்வது என்பது குறித்து சிதம்பரம் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலா் மணிவண்ணன் தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரால் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் தொடக்கம்

கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதன்படி, பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நில எடுப்ப... மேலும் பார்க்க

16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெளியிட்ட ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கடலூா் வட்ட மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா (1925-2025) கடலூா் வட்ட மாநாடு திருப்பாதிரிப்புலியூா் தேரடி தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகரச் செயலா் டி.நாகராஜ் தலைம... மேலும் பார்க்க

மாணவா்கள் விருப்பம் அறிந்து உயா் கல்வி சோ்க்கை: ஆட்சியா் வலியுறுத்தல்

பெற்றோா்கள் மாணவா்களின் விருப்பத்தை அறிந்து உயா் கல்வியில் சோ்க்க வேண்டும் என்று, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2024 - 25ஆம் கல்... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியை அடுத்துள்ள வானதிராயபுரம் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த நில எடுப்பு அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கம் 1... மேலும் பார்க்க

டிப்பா் லாரி உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் டிப்பா் லாரிகளை வரிசையாக நிறுத்தி வைத்து அவற்றின் உரிமையாளா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அண்மைக்காலமாக எ... மேலும் பார்க்க