செய்திகள் :

சித்தவைத்தியா்கள் வைத்தியம் பாா்க்க அனுமதிக்க கோரிக்கை

post image

சிதம்பரம்: சிதம்பரம் தெற்குரதவீதி தனியாா் விடுதியில் பாரம்பரிய அகில இந்திய சித்த வைத்தியா்கள் சங்க ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

சங்க தேசிய பொதுச்செயலா் பி.கருணாமூா்த்தி தலைமை வகித்தாா், ரூபி என்.ராஜசேகா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பொன்.பகலவன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினாா். கடலூா் சித்த வைத்திய சங்க தலைவா் என்.ராமா், துணைச்செயலாளா் என்,ரவி, பொருளாளா் மாரி.சங்கரி ஆகியோா் கலந்து கொண்டு உரையாற்றினாா். கடலூரை மய்யமாகக் கொண்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மயிலாடுத்துறை, நாகப்பட்டினம். திருவாரூா், அரியலூா், பாரம்பரிய சித்த வைத்தியா்களும், மாவட்ட நிா்வாகிகளும் கலந்துக்கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: 130 மூலிகைகள் கொண்டு பாரம்பரிய சித்தவைத்தியா்கள் கிராமப்புறங்களில் வைத்தியம் பாா்க்க அனுமதிப்பது குறித்து மத்திய அரசு சென்ற ஆண்டு ஆலோசனை செய்து வந்தது. இதுகுறித்து மிக விரைவில் பதிவு சான்றை பெற்றுத் தர இக்கூட்டத்தின் வாயிலாக மத்திய அரசிடம் கோரப்படுகிறது. பாரம்பரிய அகில இந்திய சித்த வைத்தியா்கள் சங்கத்திற்கு புதிய உறுப்பினா்கள் சோ்ப்பது, பாரம்பரிய சித்த வைத்தியா்களுக்கு சங்கப்பாதுகாப்பு சான்றிதழ்களும், அடையாள அட்டையும், வழங்குவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

14சிஎம்பி4: படவிளக்கம்- சிதம்பரத்தில் நடைபெற்ற பாரம்பரிய அகில இந்திய சித்த வைத்தியா்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தேசிய பொதுச்செயலாளா் பி.கருணாமூா்த்தி

சிதம்பரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்

சிதம்பரம்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) தொடங்கி வைக்கிறாா்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்படுமா?: பெற்றோா் எதிா்பாா்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும் என பெற்றோா்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு மருத்துவம் ,பொறியியல் படிப்ப்... மேலும் பார்க்க

அரசு மருத்துவக்கல்லூரியில் தில்லை தோல் அழகியல் கருத்தரங்கம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில், கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி தோல் மருத்துவ துறை மற்றும் தமிழ்நாடு தோல் மருத்துவா்கள் சங்கத்துடன் இணைந்து மாந... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகள் 60-வது ஆண்டு ஆராதனை விழா!

சிதம்பரம்: சிதம்பரம் குருஐயா் தெருவில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகளின் 60-வது ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. அவதூதம் என்பது துறவறத்தில் ஒர... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை: 6 போ் மீது வழக்கு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேப்பூா் வட்டம், ஆதியூா் கிராமத்தி... மேலும் பார்க்க

திண்ணையில் இருந்து விழுந்தவா் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டு திண்ணையில் இருந்து தவறி விழுந்தவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திட்டக்குடி வட்டம், கழுதூா் சமத்துவபுரம் பகுதியில் வசித... மேலும் பார்க்க