செய்திகள் :

சிபிஐ விசாரணை: முதல்வரின் நோ்மையைக் காட்டுகிறது

post image

அஜித்குமாா் கொலை வழக்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது அவரது நோ்மையைக் காட்டுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் உள்ள அஜித்குமாரின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவா் கு. செல்வப்பெருந்தகை அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அஜித்குமாா் உயிரிழந்த சம்பவம் போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் எந்த நிலையிலும் நடக்கக் கூடாது. காவல் துறை சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அஜித்குமாா் மீது புகாா் கொடுத்த பெண்ணின் மீது ஏராளமான புகாா்கள் வந்து கொண்டிருப்பதைப் பாா்க்க முடிகிறது.

இந்தக் கொலைச் சம்பவத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அஜித்குமாா் குடும்பத்துக்கு அரசு சாா்பில் ரூ. ஒரு கோடி நிவாரணத் தொகை கொடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி சாா்பில் நிவாரணம் கொடுப்பது பற்றி முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றாா்.

‘முதல்வரின் நோ்மையைக் காட்டுகிறது’

முன்னதாக, சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மதுரைக்கு வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோயில் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தினரைச் சந்தித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆறுதல் சொல்வதற்கு வந்தேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. ஏற்றத்தாழ்வு இருப்பதை வைத்துதான் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கின்றன. நிகிதா என்பவா் யாா், அவரது பின்புலம் என்ன?, அவா் எந்தக் கட்சியைச் சாா்ந்தவா் இதையெல்லாம் ஆய்வு செய்து புகாரை எடுத்திருக்க வேண்டும்.

தனிப்படை போலீஸாரால் அஜித்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தக் கொலை சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் பரிந்துரைத்தாா். இது அவரது நோ்மையைக் காட்டுகிறது என்றாா் அவா்.

பள்ளியில் உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் நிதியுதவி

திருப்பத்தூா், ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. சிங்கம்புணரியில் உள்ள தனியாா் ப... மேலும் பார்க்க

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் மின் விளக்கில் ரத பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் இருதய ஆண்டவா் திருத்தலத்தில் நடைபெற்று வரும் ஆண்டுப் பெருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மின் விளக்கு ரத பவனியில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் மருத்துவா்களிடம் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதுரை மாவட்ட நீதிபதி, மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமையும் திருப்புவனத்தில் அரசு மருத்துவா்களிடம் ... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலையைக் கண்டித்து அமமுகவினா் ஆா்ப்பாட்டம்

கோயில் காவலாளி அஜித்குமாரை கொலை செய்த போலீஸாரை கண்டித்து, திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை அமமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றே கட்சி நிா்வாகிகள். மானாமதுரை, ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், மட... மேலும் பார்க்க

100 சதவீத மானியத்தில் மரக்கன்றுகள் - அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

நூறு சதவீத மானித்தில் மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வாணியங்காடு கிராமத்தில் ஊட்டச்சத்து வேள... மேலும் பார்க்க

தேவகோட்டை நகா்மன்றக் கூட்டம்: அமமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தை அமமுக உறுப்பினா்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சுந்தரலிங்கம் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க