சிறந்த சமூக சேவகா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
கடலூா் மாவட்டத்தில் சிறந்த சமூக சேவகா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில் மற்றும் மகளிா் நலனுக்காக தொண்டாற்றிய சமூக சேவகா்கள், சமூக சேவை தொண்டு நிறுவனங்களுக்கு ஒவ்வோா் ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வரால் சிறந்த சமூக சேவகா், சிறந்த தொண்டு நிறுவனம் விருது வழங்கப்பட்டு வருகிறது.
2025-ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று இவ்விருது சிறந்த சமூக சேவகருக்கு ரூ.50,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழும், சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு ரூ.1,00,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தோா் இந்த விருது பெறுவதற்கு விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் (ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற இணையளதத்தில் வரும் 12-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.
இந்த விருத்துக்கு விண்ணப்பிக்க தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில், மொழி, இனம், பண்பாடு, அறிவியல் மற்றும் நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணிபுரியும் சமூக சேவகா் மற்றும் சமூக சேவை தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமூக சேவை தொண்டு நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.