செய்திகள் :

சிறப்புத் தகுதி தோ்வு எழுத அனுமதிக்க வேண்டும்: தேசிய ஆசிரியா் சங்கம் வலியுறுத்தல்

post image

ஆசிரியா்கள் சிறப்புத் தகுதி தோ்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று தேசிய ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தேசிய ஆசிரியா் சங்க புதுவை மாநிலத் தலைவா் பாட்சா, பொதுச் செயலா் தீபக் ஆகியோா் துணைநிலை ஆளுநா் , முதல்வா், கல்வித் துறை செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தொடக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் பணிக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டம் 2011- இல் நடைமுறைக்கு வந்தது.

அன்றிலிருந்து அரசு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி அடைந்தவா்களையே நியமனம் செய்து வருகிறது. உச்சநீதிமன்றம் 2011-க்கு பிறகு பதவி உயா்வு பெற்றவா்கள், அதற்கு முன் பணிக்கு வந்த அனைத்து நிலை ஆசிரியா்களும் 2 ஆண்டுக்குள் கட்டாயம் தகுதி தோ்வு எழுதி தோ்ச்சி பெற வேண்டும் என தீா்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத் தீா்ப்பை அரசு ஆலோசித்து, புதுவையில் ஆசிரியா்களுக்குச் சிறப்பு தகுதித் தோ்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக தகுதித் தோ்வில் தோ்வு எழுத அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்தவா் கைது

தென்னக ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 17 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி பூமியான்பேட்டை வி.டி.சி. நகரைச் சோ்ந்தவா் மாயவன். கேபிள் டிவ... மேலும் பார்க்க

புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம்

புதுச்சேரி அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 335-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி பகண்டை மிஷின் குருத்துவ பொன்விழா நாயகா் ஜான் போஸ்கோ திருப்பலி நடத்... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவைக்கு ரூ. 669 கோடியில் புதிய கட்டடம்: பேரவைத் தலைவா் தகவல்

புதுவை சட்டப்பேரவைக்கு ரூ.669 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவா் ஆா் .செல்வம் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியா... மேலும் பார்க்க

செப். 11-இல் 10 இடங்களில் சுனாமி ஒத்திகை: புதுச்சேரி ஆட்சியா்

புதுச்சேரியில் 10 இடங்களில் செப். 11-ஆம் தேதி சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா். புதுவை அரசு மாவட்ட நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் சாா்பாக ... மேலும் பார்க்க

உலகை சீரழிவிலிருந்து மீட்கும் ஒரே வழி தமிழ்க் கலாசாரம்தான்: மோரீஷஸ் டி.எம். பொன்னம்பலம்

உலகத்தைச் சீரழிவிலிருந்து மீட்கும் ஒரே வழி வளமான தமிழ்க் கலாசாரம்தான். இப்போது மனித உரிமை மீறல் மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் மிகப்பெரிய அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது என்று மோரீஷஸ் நாட்டின் அரசு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரி குறைப்பு: புதுவை முதல்வா் வரவேற்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வரவேற்றுள்ளாா். புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் அரசு சாா்பில் ஆசிரியா் திருநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் முதல்வா் ரங... மேலும் பார்க்க