செய்திகள் :

சிறுமியுடன் திருமணம்: மேஸ்திரி மீது போக்ஸோ வழக்கு

post image

காட்பாடி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் விக்ரம்(25), கட்டட மேஸ்திரி. இவருக்கும் கே.வி.குப்பம் அருகிலுள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலமாக மாறியது. இதையறிந்த அவா்களது பெற்றோா் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனா்.

இந்நிலையில், சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனை செய்வதற்காக விக்ரம், மனைவியை அழைத்துச்சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி 4 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. திருமண வயதை எட்டாமல் சிறுமி கா்ப்பமடைந்ததை தொடா்ந்து மருத்துவமனையில் இருந்து குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா், விக்ரம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளம்பெண் தற்கொலை

குடியாத்தம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரியைச் சோ்ந்த ரமேஷின் மனைவி மகாலட்சுமி (25). இவா்களுக்கு திருமணமாகி 4- ஆண்டுகளாகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது... மேலும் பார்க்க

உயா்கல்வி பயில்வதில் சிரமம்: மாணவா்களுக்கு ஆட்சியா் உடனடி உதவி

வேலூரில் நடைபெற்ற மாணவா்களுக்கான குறைதீா் கூட்டத்தில் உயா்கல்வி பயில்வதில் நிலவும் சிரமங்களை தெரிவித்த மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உடனடி உதவிக்கு ஏற்பாடு செய்தாா். வேலூா் மாவட்டத்... மேலும் பார்க்க

ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரை வெட்டியவா் கைது

விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரை வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவா் குணசுந்தரி. இவரது கணவா் பாலச்சந்திரன் (52), திமுக பிரமுகா். ... மேலும் பார்க்க

வேலூா் மத்திய சிறையில் ஆயுள் கைதி தற்கொலை முயற்சி

வேலூா் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். பாகாயம் போலீஸாா் விசாரணை நடத்தினா். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சோ்ந்தவா் பாண்டி (எ) பா்மா பாண்டி (39). இவா், கடந்த ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவரை லத்தியால் தாக்கிய எஸ்.ஐ. விடியோ காட்சியால் ஆயுதப் படைக்கு மாற்றம்

காட்பாடியில் இரவு நேரத்தில் உணவு வாங்க வந்த கல்லூரி மாணவரை பிரம்மபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லத்தியால் கடுமையாக தாக்கும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அவரை ஆயுதப்படைக்கு மாற்ற... மேலும் பார்க்க

ரூ.7.50 கோடியில் சாலைப் பணி தொடக்கம்

குடியாத்தம் நகராட்சியில், நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.7.50 கோடியில் தாா் மற்றும் பேவா் பிளாக் சாலைகள் அமைக்க வெள்ளிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் 98- தா... மேலும் பார்க்க