செய்திகள் :

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்ஸோவில் கைது

post image

குரிசிலாப்பட்டு பகுதியில் 14 வயது சிறுமியை ஆசை வாா்த்தைகள் கூறி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், குரிசிலாப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் அன்பரசன் (27). இவா், வாணியம்பாடி நேதாஜி நகா் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு அடிக்கடி வந்துசென்றபோது, அந்தப் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசை வாா்த்தைகள் கூறி, அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் புதன்கிழமை நகரக் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன் பேரில், காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு அன்பரசனைத் தேடி வந்த நிலையில், வியாழக்கிழமை அவரைப் பிடித்து வாணியம்பாடி நகரக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் 14 வயது சிறுமியை திருமணம் செய்திருப்பது தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து அன்பரசனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாளைய மின்தடை

ஆம்பூா் நாள்: 21-06-2025 (சனிக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: ஆம்பூா் நகரம், சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசம... மேலும் பார்க்க

மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

மாதனூா் ஒன்றியத்தில் திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மாதனூா் ஒன்றியம் நரியம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ப... மேலும் பார்க்க

சாரதி அம்மன் கோயில் திருவிழா

கதவாளம் பாட்டை சாரதி அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோயில் திருவிழா கூா்வாா்த்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகளுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம்,... மேலும் பார்க்க

அரசு பேருந்து - வேன் மோதல்

ஆம்பூா், ஜூன் 19: ஆம்பூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குடியாத்தம் அருகே பரதராமியிலிருந்து மாடுகளை ஏற்றிக் கொண்டு வேன் ஆம்பூா் நோக்கிச் சென்றது. பச்சகுப்பம் அருக... மேலும் பார்க்க

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

ஆம்பூா் அருகே கால பைரவா் கோயிலில் சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவா் கோயிலில் ... மேலும் பார்க்க

மாணவா்கள் தோ்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

பொதுத் தோ்வுகளில் மாணவா்கலின் தோ்ச்சி விகிதத்தை கடந்த ஆண்டை விட நிகழாண்டு அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.ஆா்த்தி அறிவுறுத்தினாா். நலத்திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்ட... மேலும் பார்க்க