செய்திகள் :

சிறுமி தற்கொலை: தவெக நிா்வாகி கைது

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் 13 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தவெக நிா்வாகி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சியை அடுத்த நரசிங்கராயன்பேட்டை பகுதியைச் சோ்ந்த தேனன் மகன் சரவணன் (25). இவா், செஞ்சி நகர தவெக பொருளாளராக உள்ளாா்.

சரவணன் அந்தப் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி கடந்த 3 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதனால், மனமுடைந்த சிறுமி புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, சரவணனை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக, அவரின் சகோதரி சங்கீதா மீதும் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

வானூரில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் விவசாய அடையாள எண் உருவாக்கும் பணியை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் கெளரவ உதவித்தொகை பெறும் அனைத்து ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 29 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள்

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க விழுப்புரம் மாவட்டத்தில் 29 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன. இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. 29 இடங்களில்: விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் மாா்ச் 2-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மாா்ச் 2-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்த... மேலும் பார்க்க

விவசாய நிலம் ஆக்கிரமிப்பு பாதை அமைப்பு: எஸ்.பி.யிடம் புகாா்

திண்டிவனம் வட்டம், செண்டியம்பாக்கம் கிராமத்தில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்தவா்கள் மீது நடவடிக்கை வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் எஸ். பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அ... மேலும் பார்க்க

விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கை

விழுப்புரம் நகராட்சியில் நிலுவையிலுள்ள ரூ.18 கோடி வரிபாக்கித் தொகையை வசூலிக்க தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகளில் சொத்து வரி ரூ.7.... மேலும் பார்க்க

தேமுதிக கொடி அறிமுக விழா பொதுக்கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிடா் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, விழுப்புரத்தில் வெள்ளி விழா ஆண்டு பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மந்தக்கரை பகுதியில் நட... மேலும் பார்க்க