குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான முதியவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
செஞ்சி வட்டம், தளவனூா் பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமி கடந்த 18.2.2022 அன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் தளவானூா் குளக்கரை தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் பிச்சாண்டி (60) மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில், பிச்சாண்டி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.வினோதா தீா்ப்பளித்தாா்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பில் ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, நீதிமன்ற போலீஸாா் பிச்சாண்டியை கைது செய்தனா்.