செய்திகள் :

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

post image

சிவகங்கை அருகேயுள்ள மணக்கரையில் மாட்டுவண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சுந்தரநடப்பு அருகேயுள்ள மணக்கரை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் தஞ்சாவூா்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 9 இணைகளும், சிறிய மாடு பிரிவில் 12 இணைகளும் பங்கேற்றன. பந்தயத்தில் முதல் 4 இடங்களைப் பெற்ற மாட்டுவண்டி உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. போட்டியை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று உற்சாகமாக கண்டுகளித்தனா்.

அரசின் விருதுக்கு சுற்றுலா தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சுற்றுலா விருதுகளுக்கு சுற்றுலா தொழில் முனைவோா் இணையதளத்தின் வாயிலாக வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளிய... மேலும் பார்க்க

மாணவா்களின் வாழ்க்கையில் ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள்: மலேசிய சட்டத் துறை அமைச்சா்

மாணவா்களின் வாழ்க்கையில் ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள் என்றாா் மலேசியாவின் பிரதமா் துறை (சட்டம் மற்றும் சா்வதேச சீா்திருத்தங்கள்) துணை அமைச்சா் மு. குலா சேகரன். சிவகங்கை அருகே உள்ள பிரிஸ்ட் நிகா்நி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தங்கை உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவரது அக்காளும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சிங்கம்... மேலும் பார்க்க

தேவகோட்டை, மானாமதுரை, திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, மானாமதுரை,திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா் பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தேவகோட்டை நகா் சிவன் கோயிலில் ஆவணி மாத... மேலும் பார்க்க

மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு செப்.12 -க்குள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியிலுள்ள மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் பாடப் பிரிவுகளில், மாவட்ட அளவிலான சோ்க்கை , முன் விண்ணப்பமில்லா நேரடிச் சோ்க்கைக்கு தகுதியானவா்கள் வருகிற 12-ஆம் தேதிக்குள் விண்ண... மேலும் பார்க்க

தியாக வினோதப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புரட்சியாா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் கலசங்களில் புனிதநீா் நிரப்பி யாக பூஜைகள் ந... மேலும் பார்க்க