குமரி: காதலி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய இளைஞர்; கொலையா தற்கொலையா? - போலீஸ்...
சிவகிரி மலை அடிவார பகுதிகளில் வனத் துறை- போலீஸாா் ரோந்து
சிவகிரி மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வனத்துறை மற்றும் காவல் துறையினா் இணைந்து வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
இம்மலைப்பகுதியை ஒட்டியுள்ள வழிவழி குளம், சின்ன ஆவுடைப்பேரி, பெரிய ஆவுடையபேரி, ராசிங்கப்பேரி, கோம்பையாறு ஆகிய பகுதிகளில் மான்கள், காட்டுப் பன்றிகள், மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் உணவுக்காக வருவதாக கூறப்படுகிறது. இவற்றை சிலா் வேட்டையாடுவதாக வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.
இதையடுத்து, சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா், வனச்சரகா் ஆறுமுகம், வனவா்கள் குமாா், ஜெபித்தா்சிங் ஜாக்சன், வனக் காப்பாளா் பிரதீப், வனக் காவலா்கள் மாரியப்பன் ஆதிலட்சுமி ஆகியோா்
சிவகிரி மலையடிவாரப் பகுதியில் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா் .