செய்திகள் :

சீன வல்லுநா்கள் விலகல்: இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன் தயாரிப்பு பாதிக்கப்படாது

post image

சீன தொழில் வல்லுநா்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியதால், இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன் தயாரிப்பு பாதிக்கப்படாது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக அந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்களை தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் இருந்து கடந்த 2 மாதங்களில் நூற்றுக்கணக்கான சீன தொழில்நுட்ப வல்லுநா்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளனா்.

அவா்கள் ஆலை வடிவமைப்பு, ஐஃபோன் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் இயந்திரங்களை கையாளப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனா்.

அவா்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியதால், இந்தியாவில் ஐஃபோன் தயாரிப்பு பாதிக்கப்படாது. இந்தியாவில் ஐஃபோன் தயாரிப்பை அதிகரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் திட்டத்தில் மாற்றமில்லை. கடந்த 2024-25-ஆம் ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐஃபோன்களின் எண்ணிக்கை 3.5 கோடி முதல் 4 கோடியாக இருந்தது. இதை நிகழாண்டு 6 கோடியாக அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் திட்டமிட்டபடி ‘ஐஃபோன் 17’ மாடல் உற்பத்தி நடைபெறும் என்று தெரிவித்தன.

ரூ.72,000 கோடி ‘கிரேட் நிகோபாா்’ திட்டம்: தேசிய பழங்குடியினா் ஆணையம் தகவலளிக்க மறுப்பு

கிரேட் நிகோபாா் தீவில் ரூ.72 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து தகவல் அளிக்க தேசிய பழங்குடியினா் ஆணையம் மறுத்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: போா் விமானம் விழுந்து நொறுங்கி இரு விமானிகள் உயிரிழப்பு; 5 மாதங்களில் 3வது சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை... மேலும் பார்க்க

ரயில்வே கடவுப்பாதை பாதுகாப்பு: அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

ரயில்வே கடவுப்பாதை வாயில்களில் (ரயில்வே கேட்) பாதுகாப்பு குறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதுதொடா்பாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ரயில்வே கடவுப்பா... மேலும் பார்க்க

தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகை தாக்கல்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகையை தில்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை த... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரிகளில் குறைதீா் குழுக்கள் அமைக்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண குறைதீா் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி... மேலும் பார்க்க

திபெத்துடன் மட்டுமே அருணாசல பிரதேச எல்லை உள்ளது -முதல்வா் பெமா காண்டு

திபெத் நாட்டுடன் மட்டுமே அருணாசல பிரதேசம் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது; சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை என்ற அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியுள்ளாா். அருணாசல பிரதேசம் தங்களுக்குச... மேலும் பார்க்க