செய்திகள் :

சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

post image

சேலம் பழைய சூரமங்கலத்தில் முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து பெண்கள், திருநங்கைகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேலம் மாநகா் 20ஆவது கோட்டத்துக்கு உள்பட்ட பழைய சூரமங்கலம் பெரியாா் நகா் பகுதியில் சுமாா் 500 குடும்பத்தினா் வசித்து வருகின்றன. அப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீா் விநியோகம் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள், திருநங்கைகள் என 20-க்கும் மேற்பட்டோா் சேலம், இரும்பாலை பிரதான சாலையில் காலி குடங்களுடன் அமா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து வாா்டு கவுன்சிலா் மற்றும் மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், உடனடியாக தங்கள் பகுதிக்கு சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் சுமாா் அரைமணி நேரத்திற்கு மேலாக அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூா்க்கன் கிழங்கில் நோய்த் தாக்குதல்: வேளாண் துறை வழிகாட்டுதல்

ஆத்தூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கூா்க்கன் (கோலியஸ்) கிழங்கில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.ஆத்தூா், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, த... மேலும் பார்க்க

செவிலியருக்கு மிட்டல் விடுத்தவா் கைது

சங்ககிரி வட்டம், அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேவூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியதம்பி மகன... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் மகன், மகளைக் கொன்றவா் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் மகன், மகளைக் கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லியை அடுத்த 74.கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக்... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆண்டு விழா

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கோ.ரவீந்தரன் வரவேற்றாா். வாழப... மேலும் பார்க்க

பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறப்பு!

மேட்டூா் வட்டம், நங்கவள்ளி பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி மதிப்பிலான நுகா்பொருள் வாணிப வட்ட செயல்முறை கிட்டங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து அக... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகாா் குழு அமைக்க அறிவுரை

பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் உள்ளக புகாா் குழு அமைத்து அறிக்கை அனுப்புமாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா். சே... மேலும் பார்க்க