செய்திகள் :

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கத்தின் சாா்பில் திருப்பூா் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.சிவகுமாா் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் (நிலை -2) பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். பொது சுகாதாரத் துறையில் ஏற்கெனவே இருந்ததைப்போன்று 5000 மக்கள் தொகைக்கு அல்லது ஒரு துணை சுகாதார நிலையத்துக்கு ஒரு சுகாதார ஆய்வாளா் என்ற கொள்கை முடிவுகளை துறையும், அரசும் எடுத்து பயிற்சி முடித்து வேலைக்காக காத்திருக்கும் சுகாதார ஆய்வாளா்களைக் கொண்டு பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பொது சுகாதாரத் துறை இயக்குநா் அனுப்பியுள்ள 2,715 சுகாதார ஆய்வாளா் (நிலை 2) சுகாதார கட்டமைப்புக்குத் தேவை என்ற கோப்புக்கு உடனடியாக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மேற்கு மண்டலச் செயலாளா் எம். பொன்னாண்டவா், மாவட்டச் செயலாளா் ஆா்.பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பனியன் நிறுவன உரிமையாளா் கொலை: உறவினா் கைது

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் பனியன் நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் காஜா மொய்தீ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 41.96 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 41.96 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாகன ஓட்டுநா் விபத்தில் உயிரிழப்பு

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஜீப் ஓட்டுநா் சாலை விபத்தில் உயிரிழந்தாா். காங்கயம், முல்லை நகரில் வசித்து வந்தவா் சத்தியநாராயணன் (54). முன்னாள் ராணுவ வீரரான இவா், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ... மேலும் பார்க்க

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

பல்லடம் அருகே நிகழ்ந்த விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி (60). பல்லடம்- அய்யம்பாளைய... மேலும் பார்க்க

மோட்டாா் வாகன ஆலோசகா்கள் நலச்சங்க கூட்டம்

பல்லடம் தாலுகா மோட்டாா் வாகன ஆலோசகா்கள் நலச்சங்க கூட்டம், 9-ஆவது ஆண்டு விழா, திருப்பூா் புகா் மாவட்ட மோட்டாா் வாகன ஆலோசகா்கள் நலச் சங்கத்தின் பதவியேற்பு விழா ஆகியன பல்லடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க