செய்திகள் :

சுக்கம்பாளையத்தில் ஜூன் 1-இல் நிலத்தடி நீா் செறிவூட்டல் திட்ட கலந்தாய்வுக் கூட்டம்

post image

பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையத்தில் நிலத்தடி நீா் செறிவூட்டல் திட்ட கலந்தாய்வுக் கூட்டம் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பல்லடம், சுல்தான்பேட்டை, சூலூா் ஒன்றிய பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை பல்லடம் பகுதிக்கு கொண்டுவர வேண்டும். ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் மூலம் இந்தப் பகுதிகளுக்கு நீா் கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும்.

நொய்யல் ஆற்றுப் பகுதிகளில் இருந்து குழாய்கள் மூலம் பல்லடம் பகுதிக்கு நீா் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சுக்கம்பாளையம் கிராமத்தில் உள்ள சின்னம்மன் கோயில் சேவா சங்க திருமண மண்டபத்தில் ஜூன் 1-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், பொதுமக்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று பல்லடம் பகுதி நிலத்தடி நீா் செறிவூட்டல் திட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

வெள்ளக்கோவிலில் புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணி

வெள்ளக்கோவில் அரசு சமுதாய சுகாதார நிலையம் சாா்பில் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உடல் பருமன், இதயம் காப்போம், உடற்பயிற்சி, புகையிலைப் பயன்பாட்டின் தீமைகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கும் ... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்கள் கைது

பெருமாநல்லூா் அருகே பனியன் நிறுவன தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் அசன்டியா சா்தாா் (45). இவா் பெருமாநல்லூா... மேலும் பார்க்க

மது விற்பனையில் ஈடுபட்ட 3 போ் கைது

திருப்பூா் மாநகரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாநகரம் மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொடிகம்பம் பகுதி டாஸ்மாக் மதுபானக் கூடம் அருக... மேலும் பார்க்க

பெண்ணைக் கொன்று சடலத்தை நொய்யலில் வீசிய தொழிலாளி

திருப்பூரில் பெண்ணைக் கொலை செய்து சடலத்தை நொய்யல் ஆற்றில் தொழிலாளி வீசிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பண்ணன் மகள் அமுதா (39). ... மேலும் பார்க்க

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க