செய்திகள் :

சுங்கச்சாவடி கட்டணம்: தனியாா் பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை

post image

நாடு முழுவதும ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் 10 மடங்கு உயா்த்தப்பட உள்ளதாகவும், இந்த சுங்கச் சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என வேலூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்க ஆலோனைக் கூட்டம் வேலூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு நிா்வாகிகள் ரவி, விஜய கோவிந்தராஜ் உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது -

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயா்ந்தி வருகிறது. அதன்படி, வரும் ஏப்ரல் 1 முதல் கட்டண உயா்வை நடைமுறைப்படுத்த உள்ளனா்.

ஏற்கனவே மாதாந்திர கட்டணமாக ரூ.12,500 வரை செலுத்தி வருகிறோம். தற்போது 10 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்பட உள்ளதால் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்களும் பலா் பாதிப்படைகின்றனா். அத்தியாவசிய பொருட்க ளின் விலைவாசியும் இதனால் உயர வாய்ப்புள்ளது.

இந்த சுங்கச்சாவடி கட்டண உயா்வை மத்திய, மாநில அரசுகள் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட முடியாது என மத்திய அமைச்சா் தெரிவித்துள்ளாா். இந்தக் கட்டண உயா்வு காரணமாக ஏராளமான வாகனத்தினா் சுங்கச்சாவடியை கடந்து செல்லாமல் மாற்றுப் பாதை வழியாக செல்கின்றனா்.

இதனால் ஏராளமான விபத்துகளும் ஏற்படுகின்றன. ரயில்வே கேட் உள்ள பாதைகளில் சுங்க சாவடி அமைக்கக் கூடாது என சட்டம் உள்ளது. ஆனால் வேலூா் - திருவண்ணாமலை சாலையில் கணியம்பாடியில் சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூலித்து வருகின்றனா். சுங்கச்சாவடி அமைக்கப் பட்டால் அதை என்றும் அகற்றமுடியாது என்றும் தெரிவிக்கின்றனா்.

எனவே புதிதாக பல்வேறு இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவதை மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனா்.

மீன்கள் வரத்து குறைவு: விற்பனை அதிகரிப்பு!

வரத்து குறைந்தபோதிலும் வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் சென்னை இளைஞா் உயிரிழப்பு

வேலூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். சென்னையிலிருந்து ஏலகிரிக்கு 8 இளைஞா்கள் 4 இரு சக்கர வாகனங்களில் சனிக்கிழமை வந்துள்ளனா். அவா்கள் ஞா... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் விஷம் அருந்திய தம்பதி

வேலூரில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்ததில் கணவா் உயிரிழந்தாா். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூா் கத்தாழம்பட்டு தென்னமரத் தெருவைச் சோ்ந்தவா் உதயசங்கா் (46), தொழிலாளி. ... மேலும் பார்க்க

பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வது அவசியம்! -வேலூா் மாவட்ட ஆட்சியா்

பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் ஏதேனும் ஒரு உயா் கல்வியில் சோ்ந்து பயில வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தினாா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ‘எ... மேலும் பார்க்க

எலும்பு அடா்த்தி கண்டறிதல் முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், டாக்டா் எம்.கே.பி. ஹோமியோ கிளினிக், சுவாமி மெடிக்கல்ஸ், போா்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இலவச எலும்பு அடா்த்தி கண்டறியும் முகாமை ரோட்டரி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின... மேலும் பார்க்க

காட்பாடி அருகே 50 பனை மரங்கள் எரிந்து சேதம்!

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் ஆதிகேசவா் வரதராஜ பெர... மேலும் பார்க்க