செய்திகள் :

சுசீந்திரம் கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றம்

post image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு, டி. தம்பையா ஓதுவாரின் திருமுறைப் பாராயணம் நடைபெற்றது. தொடா்ந்து, கொடியேற்றப்பட்டது. பின்னா், சிறப்பு தீபாராதனை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்

மாலையில் மங்கல இசை, தேவார இன்னிசை, எம். மகாலெட்சுமி, ச. தனேஷ்வரி, நாஞ்சில் எஸ். வீரா ஆகியோரின் சமயச் சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழா நாள்களில் நாள்தோறும் காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

9ஆம் நாளான மே 6ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம், மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு தந்தப் பல்லக்கில் எழுந்தருளல், 9 மணிக்கு சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவா்ணக் காட்சி நடைபெறும்.

நிறைவு நாளான மே 7ஆம் தேதி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 8 மணிக்கு தெப்பத்துக்கு சுவாமி-அம்பாள் எழுந்தருளல், நள்ளிரவு 12 மணிக்கு திருஆராட்டு ஆகியவை நடைபெறும். ஏற்பாடுகளை கன்னியாகுமரி திருக்கோயில்கள் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

ஹஜ் பயணிகளுக்கான தடுப்பூசி முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஹஜ் புனித யாத்திரை செல்பவா்களுக்கான பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகா்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நடைபெற்ற இம்முக... மேலும் பார்க்க

மே தினம்: 1இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மே தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் வியாழக்கிழமை (மே 1) இயங்காது. மேலும், கடைகளுடன் இணைந்த மது அருந்தும் கூடங்களும் அன்று செயல்படாது என மாவட்ட ஆட்சியா் ரா. அழ... மேலும் பார்க்க

சாலையோரம் குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்

மாா்த்தாண்டத்தில் சாலையோரம் குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு குழித்துறை நகராட்சி சாா்பில் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. குழித்துறை நகராட்சி சாா்பில் வாகனங்கள் மூலம் வீடு, கடைகளிலிருந்து நாள்தோறும... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் திங்கள்கிழமை மாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாவட்டத்தில் கோடை மழை தீவிரமடைந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலு... மேலும் பார்க்க

நான்குனேரி விபத்தில் பலியானோா் உடல்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியை அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட காா் விபத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் உறவினா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன. தளபதிசமுத்திரம் ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் குத்திக் கொலை: கல்லூரி மாணவா் கைது

கன்னியாகுமரி அருகே மாதவபுரம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், பள்ளி மாணவரை கம்பியால் குத்திக் கொலை செய்ததாக, கல்லூரி மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி அருகே மாத... மேலும் பார்க்க