Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக்...
சுசீந்திரம் கோயில் சித்திரை தேரோட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக் கோயில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இத் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த ஏப்.28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

8 ஆம் திருவிழாவான மே 5 ஆம் தேதி காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரா் திருவீதியுலா வருதலும், தொடா்ந்து 10 மணிக்கு அலங்கார மண்டபத்தில் நடராஜா் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு அஷ்டாபிஷேகமும் நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு நடராஜா், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 8.30 மணிக்கு பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது.
திருத்தேரோட்டம் ...
9 ஆம் நாளான மே 6 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, காலை 6 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி, அம்பாள் பவனி நடைபெற்றது. காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினா். இதைத் தொடா்ந்து பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

இதில், தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவா் நீல.சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், குமரி மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், திமுக இளைஞா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் சரவணன், உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு எழுந்தருளினாா். இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் பவனியும், நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவா்ண காட்சியும் நடைபெற்றது.
தெப்பத்திருவிழா...
விழாவின் நிறைவு நாளான புதன்கிழமை (மே 7) காலை 10.30 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், இரவு 8 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து இரவு 12 மணிக்கு ஆராட்டு நடைபெறும். விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி திருக்கோயில்கள் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.