செய்திகள் :

சுதந்திரத்தைப் பாதுகாத்த நமது தியாகிகளுக்கு கடமைப்பட்டுள்ளோம்: பிரியங்கா

post image

தியாகிகள் செய்த தியாகங்கள் இன்று நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்தார்.

மூன்று நாள் பயணமாக வயநாடு வந்துள்ள பிரியங்கா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அந்தவகையில், காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது உயிரிழந்த ராணுவ வீரர் தலச்சிர ஜனீஷின் நினைவாக எடவகா பஞ்சாயத்தில் கட்டப்பட்ட ஸ்மிருதி மண்டபம் திறப்பு விழாவில் பிரியங்கா உரையாற்றினார்.

நாட்டிற்காக குடும்பத்தில் உறுப்பினர்களில் ஒருவர் உயிர்த்தியாகம் செய்யும்போது, அந்த சோகம் வாழ்நாள் முழுவதும் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும். ஆனால் அவர்களுக்கு சமூகத்தின் ஆதரவிலிருந்து ஆறுதல் கிடைப்பதோடு, உங்களைச் சுற்றியுள்ள மக்களிடமிருந்தும் நினைவில் கொள்ள விரும்புபவர்களிடமிருந்தும் அன்பைப் பெறுகிறீர்கள்.

20 வயதில் ராணுவத்தில் சேர்ந்த தலச்சிரா ஜனீஷ், 2003-ஆம் ஆண்டு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்தார், அவருக்கு 2004ஆம் ஆண்டு மரணத்திற்குப் பின் சேனா பதக்கம் வழங்கப்பட்டது. 22 ஆண்டுகளுக்குப் பிறகும், அவரது தாயார் கண்களில் இன்னும் கண்ணீர் வடிக்கிறது. ஏனென்றால் அவர் இழந்ததை நாம் ஒருபோதும் திருப்பித் தர முடியாது.

ஒரு தியாகியின் தாயாகவும் மகளாகவும், அவரது வலியின் ஆழத்தை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். நமது சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை பெரும் விலை கொடுத்துப் பெறப்பட்டவை, துணிச்சலான வீரர்களின் தியாகங்களால் சாத்தியமானவை என்பதை நினைவூட்டுவதற்கு இதுபோன்ற நினைவுச்சின்னங்கள் முக்கியம் என்று அவர் கூறினார்.

மகாத்மா காந்தி சுதந்திரம் பற்றிப் பேசும்போது ஒவ்வொரு இந்தியரின் சுதந்திரத்தைப் பற்றியும் பேசினார். வலுவான, துடிப்பான மற்றும் பயனுள்ள பஞ்சாயத்து அமைப்பு அவரது கனவு. எனது தந்தை ராஜீவ் காந்தி தனது பதவிக் காலத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை நிறைவேற்றியபோது நிறைவேற்ற முயன்ற ஒரு கனவு அது என்றும் அவர் கூறினார்.

கேரளத்தில் உள்ள பஞ்சாயத்துகள் முழு இந்தியாவிற்கும் ஒரு எடுத்துக்காட்டு. குப்பை இல்லாத பஞ்சாயத்தாக அறிவிக்கப்பட்ட எடவகா பஞ்சாயத்தை அவர் பாராட்டினார். இது இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனை என்றும் அவர் கூறினார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோத... மேலும் பார்க்க

சபா்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

குஜராத்தில் உள்ள சபா்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. கடந்த 1917-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

75 ஆண்டுகால தூதரக உறவு: இந்தியா-சீனா பரஸ்பர வாழ்த்து

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி இருநாட்டு தலைவா்களும் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொட... மேலும் பார்க்க

4 நாள் ராணுவ தளபதிகள் மாநாடு: தில்லியில் தொடக்கம்

தில்லியில் 4 நாள்கள் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘புது தில்லியில் ஏப்.1 முதல் ஏப்.4 வரை ராணுவ தளபதிகள் மா... மேலும் பார்க்க