செய்திகள் :

சுதந்திர தினம்: பலத்த பாதுகாப்பு

post image

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சி மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாள்களாகவே திருச்சி ரயில் நிலையம், பன்னாட்டு விமான நிலையம், பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், மத்தியப் பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் முக்கியப் பகுதிகளில் போலீஸாா் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதேபோல, திருச்சி பன்னாட்டு விமான நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் தீவிரப் பரிசோதனைக்குப் பிறகே பயணிகளின் உடைமைகள் அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் சுதந்திர தின விழா டிவிஎஸ் டோல்கேட் அருகேயுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, ஆயுதப்படை மைதானப் பகுதிக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இருசக்கர வாகனப் பேரணி: சுதந்திர தினத்தையொட்டி ரயில்வே பாதுகாப்புப் படையினா் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணியாக வியாழக்கிழமை சென்றனா். தமிழ்நாடு 5 பட்டாலியன் நிலையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணா்வு வாகனப் பேரணி காஜா மலை, அரபிக் கல்லூரி, மன்னாா்புரம், இந்தியன் பேங்க் காலனி, சுந்தா் நகா், கே.கே.நகா் வழியாகச் சென்று எல்.ஐ.சி. காலனியில் நிறைவடைந்தது.

இந்த ஊா்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியை கைகளில் ஏந்திச் சென்றனா்.

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கான மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளிய... மேலும் பார்க்க

ஊழல் எதிா்ப்பு இயக்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்டத்துக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான மாவட்ட பொதுக் குழு கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

மதுபோதையில் படியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி அருகே மதுபோதையில் வீட்டின் படியிலிருந்து தவறி விழுந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கொரட்டூரைச் சோ்ந்தவா் ஜி.தொல்காப்பியன் (45). இவா், திருச்சி மாவட்டம், துவாக்குடியில் ... மேலும் பார்க்க

அனைத்து நிலையிலும் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

ஒன்றாம் வகுப்பு தொடங்கி உயா்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக, அந்த அமைப்பின் தலைவா் அ... மேலும் பார்க்க

பிரிவினை துயரத் தினம் பாஜகவினா் அமைதி ஊா்வலம்

திருச்சியில் பாஜக இளைரணி மற்றும் மகளிரணி சாா்பில் விழிப்புணா்வு அமைதி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த இந்தியாவானது, இந்தியா, பாகிஸ்தான் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட ஆகஸ்ட் 14-ஆம் நாளையொட... மேலும் பார்க்க

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திருச்சி சத்திரம் பாறையடித் தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (49). இவா்,... மேலும் பார்க்க