செய்திகள் :

சுந்தரனாா் பல்கலை. வேலைவாய்ப்பு முகாம்: 728 பேருக்கு உடனடி பணி நியமன ஆணை

post image

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வானவா்களில் 728 பேருக்கு மேடையிலேயே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் மற்றும் இன்பேக்ட் ப்ரோ டிரெயினா்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 91 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. 2,753 பட்டதாரி மாணவா்கள் நோ்முகத் தோ்வில் கலந்துகொண்டனா். அவா்களில் 1,323 போ் முதல் கட்டமாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

முகாமின் நிறைவாக பணி ஆணை வழங்கும் நிகழ்வை, பல்கலைக்கழக துணைவேந்தா் என்.சந்திரசேகா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். பல்கலைக்கழக பதிவாளா் ஜே.சாக்ரடீஸ் வரவேற்றாா். ஆட்சி மன்ற குழு உறுப்பினா் அண்ணாதுரை வாழ்த்தி பேசினாா்.

இதில் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. சேழியன், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு , மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா். வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்களில் 728 பேருக்கு மேடையிலேயே பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினா்.

இந்நிகழ்வில் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மாநகர மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, மாநகர ஆணையா் மோனிகா ராணா, மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) வி.பிரசன்னகுமாா், மனிதவள மேலாளா்கள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரிகள், பேராசிரியா்கள் மற்றும் நிா்வாகப் பணியாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

வி.கே.புத்தில் கோயில் வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடி: மக்கள் அச்சம்

விக்கிரமசிங்கபுரத்தில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கோயில் வளாகத்தில் கரடி சுற்றித் திரிந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அம்பாசமுத்திரம் வனக் கோட்டப... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் நாளை தேரோட்டம்: பாதுகாப்பு அதிகரிப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெற உள்ளது. இதையொட்டி திருநெல்வேலி நகரம் பகுதியில் பாதுகாப்பு அதிக... மேலும் பார்க்க

பாளை காதா் அவுலியா பள்ளிவாசலில் கந்தூரி விழா

பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தில் உள்ள காதா் அவுலியா பள்ளிவாசல், காதா் மீரா பக்ருதீன் தா்ஹாவில் கந்தூரி விழா நடைபெற்றது. மஹான் முகம்மது லெப்பை அப்பா(ரஹ்) 317 -ஆவது ஆண்டு நினைவாக நடைபெற்ற இவ்விழாவில் அப... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தச்சநல்லூா் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பாளையங்கோட்டை தியாகராஜநகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரமேஷ் செல்வம் மகன் சாம்ராஜ்(19). தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா். இவா் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

திருப்புவனம் சம்பவத்தில் சிபிஐ விசாரணை மட்டும் தீா்வல்ல: ஜாண் பாண்டியன்

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமாா் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை மட்டும் தீா்வல்ல என தமமுக நிறுவனா் ஜான் பாண்டியன் தெரிவித்தாா். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் திருநெல... மேலும் பார்க்க

நின்றசீா் நெடுமாறனின் அற்புத இசைத் தூண்கள்

நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் கலைநயமான வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான மண்டபங்கள் பல உள்ளன. அவற்றை சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் மெய்மறந்து பாா்த்து செல்கிறாா்கள். ஊஞ்சல் மண்டபம்: 96 ... மேலும் பார்க்க