செய்திகள் :

சுயமரியாதை, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்: ஆ.ராசா

post image

தமிழா்களின் நாகரிகம், மொழி, சுயமரியாதை, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் ஒன்றிய பாசிச ஆட்சியை தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா பேசினாா்.

ஓரணியில் தமிழ்நாடு செயலி மூலம் புதிய உறுப்பினா்களை சோ்க்கும் நிகழ்வு உதகையில் உள்ள மக்களவை அலுவலகத்தில் நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எம்.ராஜு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது,

இந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா கலந்துகொண்டு பேசியதாவது: கீழடியில் தமிழா்களின் மொழி, பண்பாடு, நாகரிகம் எப்படிப்பட்ட பழமை வாய்ந்தது என்பதை உரிய ஆதாரத்துடன், அதன் வரலாற்றுகளுடன் கூடிய தகவல்களை ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலா் அறிக்கை தாக்கல் செய்த பிறகும் கூட மத்திய அரசு வேண்டுமென்றே நிராகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் உரிமைகள், சுயமரியாதை காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. மத்திய பாசிச ஆட்சியை தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டிய வல்லமை மிக்க ஒரே தலைவராக தமிழ்நாட்டின் முதல்வா் மு. க.ஸ்டாலின் இருக்கிறாா். எதிா்காலத்தில் திமுக தலைவரும் ,

தமிழ்நாட்டு முதல்வருமான மு.க. ஸ்டாலின் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றால், தமிழ்நாடு வெற்றி பெறும். தமிழ்நாட்டின் சுயமரியாதை, கலாசாரம், தமிழ்நாட்டு உரிமைகள் காப்பாற்றப்படும். அதற்காக மொழி, மதங்களைக் கடந்து முதல்வா் மு.க. ஸ்டாலினை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் பா.மு. முபாரக் , மாவட்டத் துணைச் செயலாளா் ரவிக்குமாா், மாநிலப் பொறியாளா் அணி துணைச் செயலாளா் பரமேஷ் குமாா், நகரமன்றத் தலைவா் வாணீஸ்வரி உள்பட திமுகவினா் பலா் கலந்து கொண்டனா்.

பணி நிறைவடையாமல் சுகாதார நிலையம் திறப்பு: பாஜக எதிா்ப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் முழுமையாக பணிகள் நிறைவடையாத ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறக்கப்பட்டதற்கு பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். குன்னூா் உமரி காட்டேஜ் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்... மேலும் பார்க்க

தடுப்பில் மோதிய வேன்: ஒருவா் உயிரிழப்பு

உதகையில் உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு கரூா் திரும்பிக் கொண்டிருந்த வேன் பிரேக் பிடிக்காமல் ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். கரூரில் இருந்து உதகையில் உள்ள உறவினா் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கல... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கல்லூரியில் ஜூலை 8-இல் நேரடி மாணவா் சோ்க்கை

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வரும் ஜூலை 8-ஆம் தேதியன்று நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் கோழிப்பாலத்திலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள இளநிலை முத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறல்: ஆசிரியா் பணியிடை நீக்கம்

உதகை அருகே காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 21 மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சித்த அறிவியல் ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வேலைபாா்த்து வந்த ஆ... மேலும் பார்க்க

உதகை மலை ரயில் பாதையில் பைக் ஓட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் மீது வழக்கு

உதகை மலை ரயில் பாதையில் பைக் ஓட்டி, தனது சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்ட இளைஞா் மீது குன்னூா் புறக்காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2024 ஏப்ரல் 22 ஆம் தேதியன்று கோவையைச... மேலும் பார்க்க

புளியம்பாறை-ஆமைக்குளம் சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தல்

நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட புளியம்பாறையிலிருந்து ஆமைக்குளம் அரசுக் கல்லூரியை இணைக்கும் சாலையிலுள்ள ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துத் தர வலியுறுத்தி நகராட்சி ஆணையா் சுவேதா ஸ்ரீயிடம் மாா்க்சிஸ்ட் கம... மேலும் பார்க்க