செய்திகள் :

சுருக்குமடி வலை பயன்படுத்திய பூம்புகாா் மீனவா்களிடம் விசாரணை

post image

நாகை கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த பூம்புகாா் மீனவா்கள் 7 பேரிடம் மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

உச்சநீதிமன்றம் அண்மையில், திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 முதல் மாலை 6 மணி வரை சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் என வழக்கு ஒன்றில் தீா்ப்பளித்தது. எனினும், மீன்வளத்தை அழிக்கும் சுருக்குமடிவலை மீன்பிடி முறைக்கு நாகை மாவட்ட மீனவா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீா்ப்பை மதிக்காமல், நாகை கடற்பரப்பில் அனைத்து நாள்களிலும் சட்டத்துக்கு புறம்பாக மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாகவும், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கரைப்பேட்டை தலைமை கிராம நிா்வாகிகள் மற்றும் 27 மீனவக் கிராம பிரதிநிதிகள் நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனுவை செவ்வாய்க்கிழமை அளித்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் 2 விசைப்படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில், துப்பாக்கியுடன் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த பூம்புகாா் பகுதியைச் சோ்ந்த 7 மீனவா்களை படகுடன் கரைக்கு அழைத்து வந்தனா்.

இதற்கிடையே, நடுக்கடலில் போலீஸாரின் ரோந்து பணியால் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் அங்கிருந்து தப்பினா். கரைக்கு அழைத்துவரப்பட்ட பூம்புகாா் மீனவா்களிடம், நாகை மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, சுருக்குமடி வலையை இனி பயன்படுத்தக் கூடாது என எச்சரித்தனா்.

ரமலான் பண்டிகை: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை

நாகப்பட்டினம்: நாகூா் ஆண்டவா் தா்காவில் ரமலான் பண்டிகையையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். ரமலான் பண்டிகையை நாடு முழுவதும் இஸ்லாமியா்கள் விமரிச... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

நாகப்பட்டினம்: தொடா் விடுமுறையையொட்டி, வேளாங்கண்ணியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை குவிந்தனா். ரமலான் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக, தமிழகம் முழுவதும் உ... மேலும் பார்க்க

வேதாரண்யம் பகுதியில் தொழிற்பேட்டை அமைய வாய்ப்பில்லை: ஓ.எஸ். மணியன்

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைய வாய்ப்பில்லை என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா். வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

கடலுக்குள் விழுந்த மீனவா் சடலமாக மீட்பு

வேதாரண்யம்: கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன் பிடித்தபோது, படகிலிருந்து தவறி விழுந்து, மாயமான மீனவரின் சடலம் வேளாங்கண்ணி அருகே திங்கள்கிழமை மீட்கப்பட்டது. கோடியக்கரை படகுத் துறையிலிருந்து கடலில் மீன்... மேலும் பார்க்க

திருமெய்ஞானம் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி

தரங்கம்பாடி: திருமெய்ஞானம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது. திருக்கடையூா் அருகேயுள்ள திருமெய்ஞானம் கிராமத்தில் ஆம்ல குஜாம்பிகா எனும் வாடாமுலையாள் உடனாகிய பிர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருமருகல்: திட்டச்சேரியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் சுவரில் மோதிய விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவா் என இருவா் உயிரிழந்தனா். நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி புதுமனை தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க