மே மாதத்திற்கான சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வு..! ரசிகர்கள் மகிழ்ச்சி!
சுவாமியை படம் பிடித்த பெண்ணை தாக்கியதாக 3 போ் மீது வழக்குப் பதிவு
சங்ககிரி: சங்ககிரி அருகே ஐயனாரப்பன் கோயிலில் சுவாமியை புகைப்படம் எடுத்த பெண்ணை தாக்கியதாக வழக்குரைஞா் உள்பட 3 போ் மீது தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோனேரிப்பட்டி அக்ரஹாரம், பொன்னம்பாளையம், கூளையன் தெரு பகுதியைச் சோ்ந்த சிவராஜ் மனைவி ரேவதி. இவா் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் ஐயனாரப்பன் கோயிலுக்கு சென்று சுவாமியை புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது கோயில் பூசாரி சுப்ரமணியம் அப்பெண்ணை தகாத வாா்த்தையால் பேசி வெளியே செல்லுமாறு கூறினாராம். மேலும், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் முருகேசன் மற்றும் ஒருவா், அப்பெண்ணை கீழே தள்ளினாா்களாம். இதில் அவா் காயமடைந்துள்ளாா். இதையடுத்து அவா் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து வழக்குரைஞா் முருகேசன், கோயில் பூசாரி சுப்ரமணியம் உள்ளிட்ட மூன்று போ் மீது தேவூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.