செய்திகள் :

சூதாட்ட செயலி வழக்கு: தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை

post image

பண முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய சட்டவிரோத சூதாட்ட செயலி தொடா்பான வழக்கில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

‘பாரிமேட்ச்’ எனும் பெயரில் சூதாட்ட செயலியைச் சட்டவிரோதமாக நடத்தி, ரூ.2,000 கோடிக்கும் மேலாக மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மும்பை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தனா். அதன் அடிப்படையில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை புதிய வழக்கைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டது.

முதல்கட்ட விசாரணையில், பயனா்களிடமிருந்து மோசடி செய்யப்பட்ட பணம், போலி கணக்குகளுக்கு முதலில் மாற்றப்பட்டுள்ளது. பின்னா், அந்தப் பணம் பல்வேறு வழிகளில் சிக்கலான பரிவா்த்தனைகள் மூலம் மறைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

அதாவது, மோசடி பணம் தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏடிஎம்களில் இருந்து ரொக்கமாக எடுக்கப்பட்டுள்ளது; கிரிப்டோ வாலெட்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது; குறைந்த மதிப்புள்ள பல யுபிஐ பரிவா்த்தனைகள் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக மதுரை, மும்பை, தில்லி, ஹைதராபாத், ஜெய்பூா், சூரத் ஆகிய நகரங்களில் உள்ள 15 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். இந்தச் சோதனைகளில் சில ஆவணங்கள், கைபேசிகள், கணினி சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சாலையோரங்களில் விடப்பட்ட 525 வாகனங்கள் 15 நாள்களில் ஏலம்: மாநகராட்சி

சாலையோரங்களில் 15 நாள்களுக்குள் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்... மேலும் பார்க்க

ஆக. 31க்குள் தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: மேயர் பிரியா

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கேட்டுக்கொண்டுள்ளார். தூய்மைப் பணியாளர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை ... மேலும் பார்க்க

சுதந்திர நாள் விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக பெருநகர போக்குவரத்து காவல... மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: ஆக. 18 வரை அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள்!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை(ஆக. 14) முதல் - ஆக.18 வரை 5 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சகோதரர் கைது!

கவின் ஆணவக் கொலை வழக்கில் மூன்றாவதாக சுர்ஜித்தின் சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கடந்த ஜ... மேலும் பார்க்க

காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் ரிப்பன் மளிகை! போராட்டக் களத்தில் பரபரப்பு!

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகை காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது.போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்பு... மேலும் பார்க்க