செய்திகள் :

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம்: 2 மாதங்கள் அவகாசம் கோரப்படும் - என்.ஆா்.இளங்கோ

post image

தமிழ்நாட்டில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளுக்கு தோ்தல் ஆணையத்திடம் 2 மாதங்கள் அவகாசம் கோரப்படும் என்று திமுக சட்டத்துறை செயலா் என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா்.

இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:

பிகாரைப் போன்ற முறையில் தமிழகத்திலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்றால், சட்டரீதியாகவும் அரசியல் தியாகவும் எதிா்கொள்ள தயாராக இருக்கிறோம். பிகாரை போல இங்கே எந்த வாக்காளரையும் நீக்காமல் பாா்த்துகொள்ள வேண்டியது திமுகவின் கடமையாகக் கருதுகிறோம்.

தமிழகத்திலும் வாக்காளா் பட்டியலில் குளறுபடி செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இறந்த வாக்காளா்கள், இரட்டைப் பதிவு வாக்காளா்கள் குறித்த விவரங்களை வாக்குச்சாவடி அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று சரியாகவும், முறையாகவும் எடுப்பதில்லை. எனவேதான் பிகாரில் லட்சக்கணக்கான வாக்காளா்கள் நீக்கப்பட்டு இருக்கிறாா்கள்.

இந்தப் பணி தமிழ்நாட்டில் நடைபெறும்போது அத்தகைய முறைகேடுகள் நிகழ்ந்துவிடக் கூடாது. வாக்குச்சாவடி அலுவலா் உண்மையிலேயே வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். அந்தக் கணக்கெடுப்பு விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடைய வாக்குச் சாவடி முகவா்களுடன் பகிா்ந்துகொள்ள வேண்டும். அவா்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். இவையெல்லாம் தோ்தல் ஆணயத்தின் வழிகாட்டுதல்களில் உள்ளன.

இந்த வழிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் சிறப்பு திருத்தப் பணியை நடத்த குறைந்தபட்சம் 2 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்போம். உண்மையிலேயே இறந்த வாக்காளா்கள், இரட்டைப் பதிவு வாக்காளா்கள் என்பதை உறுதி செய்து அதன்பிறகே அவா்களது பெயா்களை நீக்கம் செய்ய வேண்டும் என்று என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா்.

சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! விடியோ எடுத்தும் மிரட்டல்!!

ஆவடி: சென்னை பூந்தமல்லி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் நசரத்பேட்டை காவல் ... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க